அட கடவுளே… வகுப்பறையே இடிந்து விழுந்த கோரம்… தலைமேல் கவிழ்ந்த கூரையால்… அரசுப் பள்ளியில் அலறியடித்த குழந்தைகள்… நடுங்க வைக்கும் சம்பவம்…!

By Swetha on புரட்டாதி 3, 2026

Spread the love

பாகல்கோட் தாலுகாவில் உள்ள முகலோலி தான்டா பகுதியில் உள்ள அரசுப் பள்ளியின் கூரை, மாணவர்கள் வகுப்பறையில் படித்துக்கொண்டிருந்தபோது திடீரென இடிந்து விழுந்த விபத்து அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் ஆறு குழந்தைகள் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்; உடனடியாக அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டனர்.

பல ஆண்டுகளாகப் பழுதடைந்த நிலையில் இருக்கும் இந்த பள்ளிக் கட்டடம் குறித்து பலமுறை எச்சரித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று ஆத்திரமடைந்த பெற்றோர்களும் பொதுமக்களும் குற்றம்சாட்டியுள்ளனர். பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கட்டடத்தை உடனடியாகப் புனரமைக்க வேண்டும் என்றும், நிரந்தரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் தீவிர கோரிக்கை விடுத்துள்ளனர்.

   

பள்ளியின் இந்த அவல நிலை, அரசுப் பள்ளிகளில் நிலவும் உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்புக் குறைபாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. இனிவரும் காலங்களில் இதுபோன்ற ஆபத்துகள் நேராதவாறு மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு அனைத்துப் பள்ளிகளின் கட்டடப் பாதுகாப்பையும் ஆய்வு செய்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.