மகாராஷ்டிராவின் நாந்தேத் படத்தில் காதலியின் தந்தை மற்றும் சகோதரரால் பட்டியல் சாதிய இளைஞர் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காதலியான அஞ்சல் என்ற அப்பெண் காதலனின் சடலத்திற்கு முன்பாக குங்குமம் இட்டு இறுதி சடங்கு செய்த வீடியோ இணையத்தில் வெளியானது. இந்நிலையில் இந்த கொலை குறித்து அப்பெண் கூறுகையில், “நாங்கள் மூன்று வருடங்களாக காதலித்தோம். ஒருநாள் என் குடும்பத்தினருக்கு அது பற்றித் தெரியவந்தது. அவர் ஒரு பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் என்பதால், எங்கள் குடும்பத்தினர் எங்கள் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை.
In #Maharashtra‘s #Nanded, a woman, #Anchal, applied vermillion on her head with the blood of her boyfriend, #SakshamTate, who was allegedly killed by her father and brother.
Anchal says, “We were together for three years. My family got to know about it. Because he was a… https://t.co/Y6ahJig6pR pic.twitter.com/lCQBrMjuKd
— Hate Detector 🔍 (@HateDetectors) December 1, 2025
அவர் என்னை திருமணம் செய்து கொள்ள விரும்பினால், அவர் இந்து மதத்திற்கு மாற வேண்டும் என்று என் குடும்பத்தினர் அவரிடம் கூறியிருந்தனர். அவர் இதைச் செய்யவும் தயாராக இருந்தார்… என் குடும்பத்தினர் அவரைக் கொல்ல ஒரு வாய்ப்புக்காகக் காத்திருந்தனர்… காலையில் அவர் தனது அத்தையை இறக்கிவிட ஸ்டேஷனுக்குச் செல்லும் போது நாங்கள் பேசினோம். இது நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை… மறுநாள் செய்தித்தாளில் இருந்து இதைப் பற்றி எனக்குத் தெரியவந்தது. யாரும் இதைப் பற்றி என்னிடம் சொல்லவில்லை.
சாக்ஷாம் கொல்லப்பட்ட நாள், என் சகோதரர் காலையில் என்னை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவர் மீது பொய் வழக்குப் பதிவு செய்தார். நான் எந்த வழக்கும் பதிவு செய்ய ஒப்புக்கொள்ளவில்லை. போலீசார் என் சகோதரனிடம், வழக்குகளை இட்டுக்கட்டுவதற்குப் பதிலாக, எங்களிடம் வருவதற்கு முன்பு ஏன் சம்பந்தப்பட்ட நபரைக் கொல்லக்கூடாது என்று சொன்னார்கள்? என் சகோதரர் அதை ஒரு சவாலாக எடுத்து சாக்ஷாமைக் கொன்றார்…” என்று கூறியுள்ளார்.
