அரசுப் பணத்தில் படித்துவிட்டு துரோகமா… ஒரே நேரத்தில் மாயமான 1,420 அரசு டாக்டர்கள்… அதிர்ச்சியில் தமிழக சுகாதாரத்துறை… வட்டியோடு வசூலிக்க அரசு போட்ட மாஸ்டர் பிளான்…!

Spread the love

தமிழக அரசு மருத்துவ அமைப்பையே உலுக்கும் வகையில், 1,420 அரசு மருத்துவர்கள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பணிக்கு வராமல் இருப்பது அதிகாரப்பூர்வமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தமிழக அரசின் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கம் (DME) வெளியிட்டுள்ள இந்தத் தகவல், பொதுமக்களிடையேயும் சுகாதாரத்துறையிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஏற்படும் காலியிடங்கள் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தொடர்ந்து நிரப்பப்பட்டு வரும் சூழலில், இத்தனை மருத்துவர்கள் திடீரெனப் பணியில் இல்லாதது அரசு மருத்துவ சேவையின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது.

இந்த விவகாரத்தின் பின்னணியில் உள்ள முக்கியக் காரணம், மருத்துவர்களின் உயர்கல்வி ஒப்பந்த மீறலாகும். அரசு மருத்துவ அலுவலர்களாகப் பணியில் சேரும் மருத்துவர்கள், மேற்படிப்பு படிப்பதற்காக நீட் தேர்வு அடிப்படையில் அனுமதி பெறுகின்றனர். அவ்வாறு அனுமதி பெறும்போது, “பட்ட மேற்படிப்பு முடித்த பிறகு, பணி ஓய்வு பெறும் வரை அரசுப் பணியில் தொடர்ந்து சேவை செய்ய வேண்டும்” என்ற கடுமையான நிபந்தனை விதிக்கப்படுகிறது. சில குறிப்பிட்ட படிப்புகளுக்கு மட்டுமே பிணைத்தொகை செலுத்தி பணியிலிருந்து விலக வாய்ப்பளிக்கப்படுகிறது. ஆனால், இந்த நிபந்தனைகளை ஏற்று உயர்கல்வி முடித்த சில மருத்துவர்கள், அரசுக்குத் தெரிவிக்காமல் தனியார் மருத்துவமனைகளில் அதிக ஊதியத்திற்குப் பணியாற்றச் சென்றுள்ளது தற்போதைய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

பணிக்கு வராத மொத்தம் 1,420 மருத்துவர்களில், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறையின் கீழ் 370 பேரும், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் கீழ் 766 பேரும், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணித் துறையின் கீழ் 284 பேரும் அடங்குவர். தற்போது இவர்களில் 1,420 மருத்துவர்கள் தொடர்ந்து பணிக்கு வராமல் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 680 பேர் மீது ஏற்கனவே ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 740 பேர் மீது நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. விதிகளை மீறியவர்களிடம் இருந்து பிணைத்தொகை மற்றும் அதற்கான வட்டித் தொகையை வசூலிக்கவும், பணிநீக்கம் உள்ளிட்ட கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்கவும் தமிழக சுகாதாரத்துறை தற்போது அதிரடி காட்டி வருகிறது.

Visaka

Share
Published by
Visaka

Recent Posts

“டேய்… என்னடா ஷாட் இது?… மைதானத்தை விட்டு வெளியே பறந்த பந்து… வைபவ் சூர்யவன்ஷியின் அசுர ஆட்டம்… மிரண்டுபோன ஜிம்பாப்வே…!”

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.…

51 seconds ago

“அட கடவுளே… எப்ப பார்த்தாலும் போன் ஏன் பிஸி?… சந்தேகத்தால் சீரழிந்த வாழ்க்கை… 3 பிஞ்சு சிறுமிகளைத் தவிக்கவிட்டு… தாயைக் கொன்ற கொடூரம்… ஈரோட்டில் பயங்கரம்…!”

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த 24 வயதான ரெபேக்கா என்பவருக்கும், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த பாகப்பிரகாஷ்…

9 minutes ago

அடடா… ஐடி பிரியர்களுக்கு ஜாக்பாட்… TCS-ல் செம வேலைவாய்ப்பு… இந்த சான்ஸை மிஸ் பண்ணாதீங்க… உடனே அப்ளை பண்ணுங்க…!

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் பெங்களூரில் உள்ள தனது மையத்திற்காக 'React JS with Python' தொழில்நுட்பங்களில் அனுபவம் கொண்ட…

23 minutes ago

அதிமுகவிற்கு எடப்பாடி வைத்த செக்?…. சபாநாயகர் முன் நேருக்கு நேர் மோதப் போகும் இபிஎஸ் – 4 எம்எல்ஏக்கள்…. ஜூலை 30-ல் வெடிக்கப் போகும் குண்டு….!

தமிழக அரசியல் களம் எப்போதும் சுவாரசியங்களுக்கும் திருப்பங்களுக்கும் பஞ்சமில்லாத ஒன்றாகவே இருந்து வருகிறது. அந்த வகையில், கடந்த சட்டமன்றத் தேர்தலில்…

34 minutes ago

ஸ்டாலின் டீமுக்கு ‘ரெட் கார்டு’…. செம ஸ்கெட்ச் போட்டு 2 அமைச்சர்களை இறக்கிய முதல்வர் விஜய்…. தமிழக அரசில் அதிரடி மாற்றம்….!

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு அண்மையில் பதவியேற்றுள்ள நிலையில், பல்வேறு குழுக்கள் மற்றும் ஆணையங்களுக்கான புதிய…

39 minutes ago

“பணத்தை எடு இல்லனா”…. அரிவாளுடன் புகுந்து வெறியாட்டம்… ஸ்ரீவைகுண்டம் கல்குவாரியில் தவெக நிர்வாகி செய்த காரியம்… அலறவைக்கும் சிசிடிவி காட்சி…!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே இயங்கி வரும் தனியாருக்குச் சொந்தமான கல்குவாரி ஒன்றில், தமிழக வெற்றிக் கழகத்தின் ஸ்ரீவைகுண்டம் மேற்கு…

43 minutes ago