இத்தாலியின் ‘பாக்லியாரா டெய் மார்சி’ என்ற குக்கிராமத்தில் சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு லாரா பஸ்ஸி என்ற பெண் குழந்தை பிறந்துள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெறும் 19 பேர் மட்டுமே வசித்து வந்த இந்த ஊரில், மனிதர்களை விடப் பூனைகளின் ஆக்கிரமிப்பே அதிகமாக இருந்து வந்தது.
இந்நிலையில், பல தசாப்தங்களாகக் குழந்தையின் அழுகுரலே கேட்காத அந்த வீதிகளில், தற்போது ஒரு மழலையின் வரவு அங்குள்ள மக்களுக்குப் புதிய வாழ்வாதார நம்பிக்கையை அளித்துள்ளது. இந்த மகிழ்ச்சியான நிகழ்வை அந்த ஊரே திருவிழாவாகக் கொண்டாடி தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகளை நடத்தியுள்ளது.
மக்கள் தொகை சரிவைச் சந்திக்கத் தவிக்கும் இத்தாலி அரசு, அங்கு பிறக்கும் குழந்தைகளுக்குப் பல்வேறு ஊக்கத்தொகைகளை அறிவித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இந்தக் குழந்தையின் பெற்றோருக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான போனஸ் தொகையும், பராமரிப்புக்காக மாதம் 40 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பின்மை மற்றும் பொருளாதாரக் காரணங்களால் இளம் தலைமுறையினர் குழந்தை பெற்றுக்கொள்ளத் தயங்குவதால், அந்நாட்டில் பிறப்பு விகிதம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், சிறிய கிராமத்தில் பிறந்துள்ள இந்த முதல் குழந்தை, ஒட்டுமொத்த தேசத்திற்கும் மக்கள்தொகை மீட்சியின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் நமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கஷ்டப்பட்டு உருவாக்கிய குடும்பச் சொத்தை ஒருவர் இரக்கமின்றி சேதப்படுத்துவதைப் பார்க்கும்போது…
காதலித்த இளைஞனைத் திருமணம் செய்ய குடும்பத்தினர் மறுத்ததால், ஒரு இளம் பெண் அவனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதையறிந்த அப்பெண்ணின்…
சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த விஜயராஜா (50) என்பவர் ஃபிரிட்ஜ், மிக்ஸி பழுது பார்க்கும் வேலை செய்து கொண்டு, 'சனீஸ்வர…
திருநெல்வேலி டவுண் அருகிலுள்ள நைனார்குளம் தெருவைச் சேர்ந்தவர் உசேன் பாபு. இவர் தனது வீட்டில் வளர்த்து வரும் செல்லப் பூனை…
உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் காதலின் துயரமான முடிவு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அஞ்சல் மற்றும் வினய் கௌதம்…
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் நெலகொண்டபள்ளி மண்டலம் அப்பலநர்சிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி புசுலூரி சீனிவாச ராவ் (38), சொந்தமாக…