“அடிக்காதீங்க!”… நடுரோட்டில் வாலிபருக்கு நேர்ந்த கதி.. தன் உயிரைப் பணையம் வைத்து காப்பாற்ற முயன்ற பெண்… நெஞ்சை உலுக்கும் வீடியோ…!!

By Muthu Mani on வைகாசி 19, 2026

Spread the love

ஒடிசா மாநிலம் பெர்ஹாம்பூர் பகுதியில் பகல் நேரத்தில் நடுரோட்டில் நடந்த ஒரு கொடூரமான தாக்குதல் சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. முக்தேஸ்வர் குமார் மற்றும் ஆசிஷ் குமார் என்ற இரு சகோதரர்கள், உமேஷ் ரத் என்ற நபர் மீது மக்கள் நடமாட்டம் மிகுந்த பொதுவழியில் விறும்தனமாக உயிர்போகும் அளவிற்குத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இரும்புக் கம்பிகள் மற்றும் ஆயுதங்களால் உமேஷை அவர்கள் கொடூரமாகத் தாக்கிய இந்தத் துயரச் சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்தத் தாக்குதலின் போது, உமேஷுடன் இருந்த ஒரு பெண் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் துணிச்சலாகச் செயல்பட்டு அவரைப் பாதுகாக்கப் போராடியுள்ளார். குற்றவாளிகள் உமேஷை அடிக்காதவாறு அவர் மீது படுத்துக் கொண்டும், தாக்குதலை நிறுத்துமாறு கைகளைக் கூப்பி அழுது கெஞ்சியபடியும் அந்தப் பெண் காட்சியளித்தார். தற்போது படுகாயமடைந்த உமேஷ் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இக்கொடூரச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.