“அமெரிக்க துணை அதிபர் விமானத்தை வளைத்த 5 போர் விமானங்கள்… பாகிஸ்தான் வான் எல்லையில் நடந்தது என்ன?…. பதற வைக்கும் வீடியோ”…!!

By Muthu Mani on சித்திரை 11, 2026

Spread the love

வளைகுடாவில் கடந்த ஒரு மாதமாக நீடித்த அமெரிக்க-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர், தற்போது 15 நாட்கள் தற்காலிக போர்நிறுத்தத்தை எட்டியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, நிரந்தர அமைதியை நோக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க பேச்சுவார்த்தை இன்று சனிக்கிழமை பாகிஸ்தானில் தொடங்குகிறது. 1979-ஆம் ஆண்டு ஈரானியப் புரட்சிக்குப் பிறகு, இரு நாடுகளின் உயர்மட்டத் தலைவர்கள் நேரடியாகச் சந்திப்பது இதுவே முதல்முறை என்பதால் உலக நாடுகளின் கவனம் பாகிஸ்தான் பக்கம் திரும்பியுள்ளது.

அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் தலைமையிலான குழு பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்தபோது, அவர்களுக்கு மரியாதை மற்றும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் பாகிஸ்தான் விமானப்படையின் ஐந்து எஃப்-16 (F-16) போர் விமானங்கள் எஸ்கார்ட் செய்து அழைத்து வந்தன. இந்தத் தூதுக்குழுவில் டொனால்ட் ட்ரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் உள்ளிட்ட முக்கியப் பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர். ஈரான் தரப்பில் அந்நாட்டுச் சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் மற்றும் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

   

இருப்பினும், இந்தப் பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு எட்டுவதில் பெரும் சவால்கள் நிலவுகின்றன. ஈரான் தனது யுரேனியத்தை ஒப்படைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்சத் திட்டத்தை அமெரிக்கா முன்வைக்க, போரினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்ற 10 நிபந்தனைகளை ஈரான் வலியுறுத்துகிறது. அமெரிக்கா மீதான நம்பிக்கையின்மையை ஈரான் பகிரங்கமாகத் தெரிவித்துள்ள போதிலும், அடுத்த வாரம் நடைபெற உள்ள இஸ்ரேல்-லெபனான் பேச்சுவார்த்தைக்கு இந்த இஸ்லாமாபாத் சந்திப்பு ஒரு முக்கிய முன்னோட்டமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.