புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அருகே கள்ளக்காதல் மற்றும் பணத்தகராறு காரணமாகப் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வில்லியனூர் பகுதியைச் சேர்ந்த தமிழ்செல்வி (40), தனது கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று மகளுடன் வசித்து வந்தார். இவருக்கும், அய்யப்பன் (40) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. நாளடைவில் இருவருக்கும் இடையே பண விவகாரத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவத்தன்று ஏற்பட்ட மோதலில் ஆத்திரமடைந்த அய்யப்பன், தமிழ்செல்வியைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் கொலையை மறைப்பதற்காக, அவரது உடலை ஒரு சாக்கு மூட்டையில் கட்டி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வீசிவிட்டுத் தப்பியோடியுள்ளார்.இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு அய்யப்பனைக் கைது செய்தனர். விசாரணையில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கான அரசியல் நகர்வுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், விசிக மற்றும் இடதுசாரி கட்சிகள் தங்களின் ஆதரவு குறித்த முடிவை…
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இந்தப் போட்டியில், SRH அணியின் இளம் வீரர் இஷான் மலிங்கா ஒரு முக்கியமான கேட்ச்சை…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில், காங்கிரஸ் கட்சி மறைந்த முன்னாள் முதல்வர் பெருந்தலைவர்…
கடந்த 2022-ஆம் ஆண்டு பயனர் ஒருவர் தனது எக்ஸ் (X) தளத்தில், எதிர்காலத்தில் ஒரு வைரஸ் பாதிப்பு ஏற்படும் என்றும்,…
தமிழக அரசியலில் "அடுத்த முதல்வர் யார்?" என்ற மெஜாரிட்டி யுத்தம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ள…
சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் அந்த வீடியோவில், ஜூனியர் மாணவர் ஒருவரைச் சூழ்ந்துகொண்டு சீனியர் மாணவர்கள் சிலர் மிரட்டுவதைக்…