தமிழகத்தில் தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் இந்த முறையும் எப்படியாவது ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்ற எண்ணத்தில் முதல்வர் ஸ்டாலின் பல வியூகங்களை வகுத்து வருகின்றார். தனது கூட்டணி கட்சிகளை பலமாக வைத்திருக்கும் திமுக மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. மறுபக்கம் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் கூடுதல் தொகுதிகளை கேட்டு வரும் நிலையில் அவர்களுடனும் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்நிலையில் 2026 தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதே தங்கள் விருப்பம் என்று CPM பெ. சண்முகம் தெரிவித்துள்ளார். தஞ்சையில் பேட்டியளித்த அவர், திமுக உடனான தொகுதி பங்கீடு பேச்சின் போது கூடுதல் தொகுதிகளை பெற முயற்சிப்போம் என்று குறிப்பிட்டார். ஏற்கனவே காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் கூடுதல் தொகுதிகளை பெற முயற்சிக்கும் நிலையில் தற்போது CPM கட்சியும் இவ்வாறு கூறியிருப்பது திமுகவுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
