ஓடும் ரயிலில் சக பயணிகள் முன்னிலையிலேயே ஒரு ஜோடி தங்களது இருக்கையை படுக்கையறையாக மாற்றிய அதிர்ச்சி சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரயிலின் பொதுப் பெட்டியில் மற்ற பயணிகள் அனைவரும் அமர்ந்திருக்க, எவ்வித கூச்சமும் இன்றி அந்த ஜோடி எல்லை மீறிய செயல்களில் ஈடுபட்டனர். இதைப் பார்த்த அங்கிருந்த முதியவர்களும் குழந்தைகளும் பெரும் சங்கடத்திற்கு உள்ளாகினர். மனிதநேயமும் நாகரிகமும் பொது இடங்களில் எந்த அளவிற்கு சிதைந்து வருகிறது என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி.
https://x.com/rajababuyadav_/status/2033386891345854721?s=20
அருகில் இருந்த பயணி ஒருவர் இந்த அருவருக்கத்தக்கச் செயலைத் தனது மொபைல் கேமராவில் ரகசியமாகப் படம்பிடித்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்தக் காட்சிகள் தற்போது வைரலாகி வரும் நிலையில், இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். “பொது இடங்களில் இது போன்ற அநாகரிகமான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது ரயில்வே நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பொதுமக்கள் ஆவேசமாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
