தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தான் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்தியத் தேர்தல் விதிமுறைகளின்படி, ஒருவர் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றால், ஏதேனும் ஒரு தொகுதியை மட்டும் தக்கவைத்துக்கொண்டு மற்றொன்றை ராஜினாமா செய்ய வேண்டும். இதனால், தனது அரசியல் பயணத்தின் தொடக்கத்திலேயே விஜய் எந்தத் தொகுதியைத் தக்கவைத்துக் கொள்வார் என்ற எதிர்பார்ப்பு ஒட்டுமொத்த தமிழக மக்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.
விஜய் தற்போது சென்னை நீலாங்கரையில் வசித்து வருவதால், நிர்வாக வசதி மற்றும் மக்கள் தொடர்பு ஆகியவற்றை கருத்தில்கொண்டு அவர் பெரம்பூர் தொகுதியையே தக்கவைத்துக் கொள்ள அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். தலைநகர் சென்னையில் ஒரு தொகுதியைத் தன்வசம் வைத்திருப்பது, அரசியல் ரீதியாக அவருக்குப் பலமாக அமையும் என்றும் அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர். இதனால் பெரம்பூர் தொகுதி வாக்காளர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
மறுபுறம், ஒருவேளை விஜய் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்யும் பட்சத்தில், அங்கு ஆறு மாத காலத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டிய சூழல் உருவாகும். திருச்சியைத் தனது அரசியல் திருப்புமுனை இடமாகக் கருதும் விஜய், அங்குள்ள மக்களின் பேரன்பைப் பெற்றுள்ள நிலையில், அந்தத் தொகுதியை விட்டுக்கொடுப்பாரா அல்லது புதிய வியூகம் எதையேனும் வகுப்பாரா என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும். விஜய்யின் இந்த முக்கிய முடிவுக்காகத் தமிழக அரசியல் களம் ஆவலோடு காத்திருக்கிறது.
திமுக ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக விமர்சிக்கும் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோவிற்கு, திமுகவைக் குறை கூற எந்த தகுதியும்…
தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களின் இ-கேஒய்சி (eKYC) சரிபார்ப்புப் பணிகளை 100 சதவீதம் நிறைவு செய்யும் நோக்கில், இன்று (செப்டம்பர் 19)…
அதிமுகவிலிருந்து விலகி மாற்று முகாமிற்குச் சென்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தலா ரூ.35 கோடி வரை கொடுக்கப்பட்டதாக முன்னாள் பேரவைத் துணைத்…
தமிழக முதல்வர் விஜய்யின் மிசா குறித்த பேச்சுக்கு அரசியல் ரீதியாகப் பதிலடி கொடுக்கும் வகையில், 'தி மிசா மார்க்' என்ற…
டெல்லியைச் சேர்ந்த ' பெஜெயின்டில் ' என்ற சமூக வலைதளப் படைப்பாளி , இரவில் பெண்களின் பாதுகாப்பைச் சோதித்துப் பார்க்க…
நாட்டின் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிதாரி தொடர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுரேந்தர் கோலி, ஹரித்வாரின் பூபத்வாலா பகுதியில்…