2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில், சென்னை வேளச்சேரி தொகுதி மிக முக்கியமான களமாக உருவெடுத்துள்ளது. இங்கு திமுக மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுமே இளைஞர் அணி நிர்வாகிகளைப் போட்டியிட வைக்கத் திட்டமிட்டு வருகின்றன. திமுக தரப்பில் இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயல் வேட்பாளராக நிறுத்தப்பட வாய்ப்புள்ள நிலையில், அவருக்குப் போட்டியாக பாஜக தனது மாநில இளைஞரணி தலைவர் சூர்யாவைக் களம் இறக்க ஆலோசித்து வருகிறது. இதற்காக மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் தமிழக பாஜக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், பாஜகவின் மூத்த தலைவரான தமிழிசை சௌந்தரராஜனும் வேளச்சேரி தொகுதியில் போட்டியிட விருப்பம் காட்டி வருகிறார். இருப்பினும், கடந்த தேர்தல்களில் அவர் வெற்றி பெறாததைக் காரணம் காட்டி, தலைமை இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. வேளச்சேரியில் பாஜகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகக் கூறப்படும் நிலையில், தமிழிசையின் கனவு பலிக்குமா அல்லது இளைஞரணி நிர்வாகிகள் மோதிக் கொள்ளும் தொகுதியாக இது மாறுமா என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…