சமூக வலைதளங்களில் தற்போது ஒரு சிறுவனின் மழலை மாறாத அன்பு மற்றும் உதவியைச் சித்தரிக்கும் காணொளி வைரலாகி பலரின் மனங்களை வென்று வருகிறது. அந்த வீடியோவில், வயல்வெளி போன்ற ஒரு இடத்தில் கடுகுப் பயிர்கள் ஏற்றப்பட்ட ஒரு பார வண்டி (புக்கி) நிற்கிறது. வேலைப்பளுவில் இருக்கும் தனது தாய்க்கு உதவ வேண்டும் என்ற நல்லெண்ணத்தில், அந்தச் சிறுவன் பார வண்டியின் முன்பகுதியைப் பிடிக்க முயல்கிறான். ஆனால், வண்டியில் பாரம் அதிகமாக இருந்ததாலும், சிறுவனின் எடை குறைவாக இருந்ததாலும், அவன் வண்டியைப் பிடித்த உடனே நிலைதடுமாறி காற்றில் தொங்க ஆரம்பிக்கிறான்.
&
Hilarious: Loving Son Tries To Just Help His Mother But Ends Up Getting In Trouble|WATCH pic.twitter.com/BQGxpAeOAJ
— Ghar Ke Kalesh (@gharkekalesh) February 18, 2026
nbsp;
தன் கால்கள் தரையில் படாமல் காற்றில் ஊசலாடுவதைக் கண்டு பயந்த அந்தச் சிறுவன், உடனடியாக அழத் தொடங்குகிறான். அருகில் இருந்த அவனது தாய், இதைக் கண்டவுடன் சிரித்துக்கொண்டே ஓடி வந்து குழந்தையைப் பாதுகாப்பாகக் கீழே இறக்குகிறார். தாய்க்கு உதவ வேண்டும் என்ற அந்தச் சிறுவனின் உண்மையான அக்கறையும், எதிர்பாராத விதமாக அவன் காற்றில் தொங்கிய அந்தத் தருணமும் பார்ப்பவர்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. இந்தச் சிறுவனின் வெள்ளந்தியான குணத்தைப் பாராட்டி இணையவாசிகள் பலரும் இக்காணொளியைப் பகிர்ந்து வருகின்றனர்.
