வங்கி வைப்புத்தொகையை விட கூடுதல் லாபம் தரக்கூடிய மத்திய அரசின் ‘தேசிய சேமிப்பு பத்திரம்’ (NSC) திட்டம் முதலீட்டாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 2026-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், இத்திட்டத்திற்கு அரசு 7.7% வட்டி வழங்குகிறது. இது எஸ்பிஐ, எச்டிஎஃப்சி போன்ற முன்னனி வங்கிகள் தரும் 6% முதல் 6.5% வரையிலான வட்டியை விட மிக அதிகம். கூட்டு வட்டி முறையில் கணக்கிடப்படுவதால் முதலீடு செய்யும் பணத்திற்கு இரட்டிப்புப் பலன் கிடைப்பதோடு, வருமான வரிச் சட்டம் 80C பிரிவின்கீழ் 1.50 லட்சம் ரூபாய் வரை வரிவிலக்கும் பெற்றுக்கொள்ளலாம்.
ஐந்தாண்டு கால முதலீட்டுத் திட்டமான இதில் அரசு 100% பாதுகாப்பு அளிப்பதால் நடுத்தர மக்கள் அச்சமின்றிப் பணத்தைச் சேமிக்கலாம். அவசரத் தேவைக்கு இடையில் பணத்தை எடுக்க முடியாது என்ற ஒரு நிபந்தனை இருந்தாலும், வங்கிகளை விட 1.5% வரை அதிக வட்டி கிடைப்பது இதன் தனிச்சிறப்பாகும். பங்குச்சந்தை அபாயங்கள் ஏதுமின்றி குழந்தைகளின் எதிர்காலம் அல்லது ஓய்வுக்காலத்திற்காகத் திட்டமிடுபவர்களுக்குப் தபால் நிலையத்தின் இந்தத் திட்டம் ஒரு சிறந்த வரப்பிரசாதமாகும்.
1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…
பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…
போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…
முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…