“பெத்த தந்தையா? இல்லை அரக்கனா?… வராண்டாவில் அனாதையாகக் கிடந்த சிறுவனின் உடல்… சித்தியின் கொடுமைக்கு பலியான பிஞ்சு உயிர்.. லக்னோவில் அரங்கேறிய பயங்கரம்!”

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், நான்கு வயது சிறுவன் அவனது தந்தை மற்றும் சித்தியால் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் மனிதநேயத்தையே உலுக்கியுள்ளது. லக்னோவின் சவுக் பகுதியைச் சேர்ந்த பீஷ்மா கர்பந்தா என்பவரது முதல் மனைவி அண்மையில் உயிரிழந்த நிலையில், அவர் ராகினி என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். திருமணமான சில நாட்களிலேயே, ராகினி தனது வளர்ப்பு மகனைச் சிறு சிறு விஷயங்களுக்காகவும் மிகக் கொடூரமாக அடித்துத் துன்புறுத்தியுள்ளார். மகனின் அலறல் சத்தம் கேட்டும், தந்தை பீஷ்மா அதைக் கண்டுகொள்ளாமல் மௌனம் காத்தது அநீதியின் உச்சமாக அமைந்துள்ளது.

இந்தக் கொடுமையின் உச்சமாக, ஒரு நாள் அந்தச் சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளான். இது குறித்துச் சிறுவனின் அம்மாவழிப் பாட்டியான சுதா காஷ்யப்பிற்கு பீஷ்மா போன் செய்து, “உங்கள் பேரன் இறந்துவிட்டான்” என்று மட்டும் ஒற்றை வரியில் தகவலைத் தெரிவித்துள்ளார். தனது மகளைப் பறிகொடுத்த சோகத்தில் இருந்த அந்தப் பாட்டி, மகளின் அடையாளமாக இருந்த பேரனும் மறைந்த செய்தி கேட்டுத் துடித்தபடி உறவினர்களுடன் லக்னோவிற்கு விரைந்து வந்துள்ளார். அங்கு அவர் கண்ட காட்சி காண்போர் நெஞ்சைப் பதறவைப்பதாக இருந்தது.

வீட்டு வராண்டாவில் அனாதையாகக் கிடத்தப்பட்டிருந்த அந்தச் சிறுவனின் உடலில் கொடூரமான காயங்கள் இருந்தன. சிறுவனின் கால்களில் சூடு வைக்கப்பட்ட தழும்புகள், உடல் முழுவதும் நீல நிறத்தில் அடிப்பட்ட காயங்கள் மற்றும் கத்தியால் கீறப்பட்ட அடையாளங்களைக் கண்டு உறவினர்கள் கதறித் துடித்தனர். தனது பேரனின் மரணத்தில் மர்மம் இருப்பதை உணர்ந்த பாட்டி, உடனடியாகத் தனது மருமகன் பீஷ்மா மற்றும் அவரது இரண்டாவது மனைவி ராகினி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில், அந்தச் சிறுவன் தந்தை மற்றும் சித்தியால் பெல்ட், கயிறு மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. தந்தையே அரக்கனாக மாறித் தனது சொந்த மகனைச் சித்திரவதை செய்து கொன்றது அம்பலமானதைத் தொடர்ந்து, போலீசார் பீஷ்மா மற்றும் ராகினி ஆகிய இருவரையும் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அந்தத் தம்பதியினர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் கோபத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Muthu Mani

Recent Posts

“டேய் திரும்பிப் பாக்காம ஓடுங்கடா” மனிதர்களே தேவையில்லை… தானாகவே காட்டுப்பன்றிகளை விரட்டும் ரோபோ… வைரலாகும் வீடியோ இதோ..!!

போலாந்தில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குள் புகுந்து பயிர்களையும் சொத்துக்களையும் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை விரட்டுவதற்காக 'எட்வர்ட் வார்ச்சோக்கி' (Edward Warchocki) என்ற நவீன ரோபோ…

6 minutes ago

BREAKING: எனக்கும், அன்புமணிக்கு எந்த தொடர்பும் இல்லை… பாமக ராதாமஸ் அதிரடி அறிவிப்பு..!!

பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் பரப்புரைகளில் தன்னுடைய புகைப்படத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி, அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ்…

11 minutes ago

வரும் 7 நாட்களுக்கு அனைத்து வீடுகளிலும்… தவெக தலைவர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுப் பெண்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளார்.…

15 minutes ago

ரிலீஸ்க்கு முன்பே லீக்… எடிட்டிங் ரூமிலேயே அரங்கேறிய ஜனநாயகன் படத் திருட்டு… சைபர் கிரைம் விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்..!

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை சிக்கல்கள் மற்றும் தேர்தல் நடத்தை…

47 minutes ago

“ஜாலியாக இருக்கலாம் வா”… இளம்பெண்ணை அழைத்து சென்று கொடூரமாக கொன்ற மேஸ்திரி… விழுப்புரம் அருகே அரங்கேறிய திக் திக் சம்பவம்…!

புதுச்சேரி மற்றும் தமிழக எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், மனித உறவுகளுக்கு இடையே பணப் பரிமாற்றம்…

58 minutes ago

“அம்மா போன அதே நாளில் நானும் போறேன்”… இளம்பெண் எழுதிய உருக்கமான கடிதம்…. பின்னணியில் இருக்கும் சோகம்…!

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காந்தி நகரில் வாடகைக்கு தங்கி, ஒரகடம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தேனி மாவட்டத்தைச்…

1 மணத்தியாலம் ago