“அவ இல்லாம என்னால முடியாது அத்தை” கதறி அழுத காதலன்… ஜாதி பார்த்த காதலியின் தந்தை… மெட்ரோ ஸ்டேஷனில் மாஸ் காட்டிய அத்தை..!!

By Soundarya on மாசி 6, 2026

Spread the love

மும்பையில் நான்கு ஆண்டுகளாகத் தாகக் காதலித்து வந்த ஜோடிக்கு, இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில் ரோகா (திருச்சடங்கு) விழாவிற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்காக இளைஞரின் மாமா மற்றும் அத்தை கிராமத்திலிருந்து மும்பைக்கு வரவழைக்கப்பட்டனர். ஆனால், விழாவன்று பெண்ணின் தந்தை திடீரென ஜாதி வேறுபாடுகளைக் காரணம் காட்டித் திருமணத்திற்கு முட்டுக்கட்டை போட்டார். இதனால் உடைந்துபோன அந்த இளைஞர் மெட்ரோ நிலையத்திலேயே கதறி அழத் தொடங்கினான்.

இளைஞரின் அத்தை அந்தப் பெண்ணை மெட்ரோ நிலையத்திற்கு வரவழைத்துத் தந்தையிடம் பேச முயன்றார். ஆனால் அவர் பேச மறுத்துத் தன் மகளை வீட்டிற்குத் திரும்புமாறு கட்டளையிட்டார். இருப்பினும், அந்தப் பெண் தன் காதலில் உறுதியாக இருப்பதை உறுதி செய்த அத்தை, துணிச்சலான முடிவை எடுத்தார். எதைப் பற்றியும் கவலைப்படாமல், மெட்ரோ நிலையத்திலேயே அந்த ஜோடிக்கு ரோகா விழாவை நடத்தி வைத்து அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.