ஜெய்ப்பூர் பிங்க் சிட்டி பகுதியில் உள்ள ஜர்னலிஸ்ட் காலனி அருகே கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9:30 மணியளவில் நிகழ்ந்த கோர விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் உள்ள சாலையோரக் கடைகளில் பொதுமக்கள் உணவு அருந்திக்கொண்டிருந்தபோது, அதிவேகமாக வந்த ஒரு வெள்ளை நிற ‘ஆடி’ கார், கட்டுப்பாட்டை இழந்து கடைகளுக்குள் புகுந்தது. குண்டு வெடித்தது போன்ற பயங்கர சத்தத்துடன் வந்த அந்தக் கார், சாலையோரத் தடுப்பில் மோதிய பிறகும் நிற்காமல் சுமார் 30 மீட்டர் தூரம் வரை அங்கிருந்தவர்கள் மீது மோதிச் சிதைத்தது.
#WATCH | Rajasthan | Hit-and-run incident reported in Jaipur
South Jaipur DCP Rajshree Raj Verma says, "A car ran over some stalls at Kharbas Circle. One casualty has been reported so far and as per our information, 11 are injured. As per the latest feedback, no one is critical.… pic.twitter.com/Fe7DnIxx6L
— ANI (@ANI) January 9, 2026
