கரூர் துயர் சம்பவத்தில் 41 பேர் பலியான வழக்கு, சிபிஐ விசாரணை கோரும் 5 மனுக்கள் ஆகியவை இன்று SC-யில் விசாரணைக்கு வந்தன. அப்போது, தமிழக வெற்றிக் கழக தரப்பு, எதிர்மனுதாரராக இல்லாத விஜய்க்கு எதிராக சென்னை HC கருத்து தெரிவித்து வருவதாக கூறியது. மேலும், காவல்துறை சொன்னதால் தான், கரூரில் இருந்து விஜய் சென்னைக்கு சென்றதாகவும் தெரிவித்துள்ளனர். அதோடு, பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க தவெக-வினருக்கு அனுமதி வழங்கவில்லை
கரூர் சம்பவத்தில் விசாரணை நடத்தப்படுவதை நாங்கள் எதிர்க்கவில்லை. உச்ச நீதிமன்றமே சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடக்கட்டும். முன்னாள் நீதிபதி விசாரணையை மேற்பார்வையிடட்டும் தமிழ்நாடு காவல்துறையின் சிறப்பு விசாரணைக்குழுவை நாங்கள் ஏற்கவில்லை எனவும் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.
