மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வராது!… அடுத்த 1 வாரத்தில் அரசு தரும் ரூ.2000.. யார் யாருக்கு கிடைக்கும்?… தமிழக அரசின் முக்கிய அப்டேட்…!!!

By Muthu Mani on பங்குனி 28, 2026

Spread the love

தமிழகத்தில் செயல்படுத்தப்படும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, புதுமைப்பெண் மற்றும் தமிழ்புதல்வன் ஆகிய மூன்று முக்கிய திட்டங்களின் கீழ் பயனாளர்களுக்கு இந்த மாதம் ரூ.3000 வரை உதவித்தொகை கிடைக்க வாய்ப்புள்ளது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிய பயனாளிகளான முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகள் மற்றும் புதிய ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் என சுமார் 4 லட்சம் பேர் இணைக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், இவர்களுக்கு பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான நிலுவைத் தொகை கடந்த வாரமே மொத்தமாக வழங்கப்பட்டுவிட்டதால், வரும் ஏப்ரல் மாதம் மட்டும் தனியாக உரிமைத்தொகை வழங்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி தொடரும் மாணவிகளுக்கான ‘புதுமைப்பெண் திட்டம்’ மற்றும் மாணவர்களுக்கான ‘தமிழ்புதல்வன் திட்டம்’ ஆகியவற்றின் அடுத்த தவணைத் தொகை ஏப்ரல் முதல் வாரத்தில் விடுவிக்கப்பட உள்ளது. இத்திட்டங்களின் கீழ் தகுதியுள்ள மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.1000 நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இதன் மூலம் ஒரே குடும்பத்தில் கல்லூரி பயிலும் ஒரு மாணவன் மற்றும் ஒரு மாணவி இருந்தால், அந்தப் பெற்றோருக்கு இந்த மாதம் கல்வி உதவித்தொகையாக மட்டும் ரூ.2000 வரை கிடைக்கும்.

   

தற்போது திமுக கூட்டணி தொகுதிப் பங்கீட்டுப் பணிகள் நிறைவடைந்து தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இந்த அரசு நலத்திட்ட உதவிகள் தடையின்றி பயனாளிகளுக்குச் சென்றடைவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் மாணவிகள் இளங்கலை படிப்பு முடிக்கும் வரை இந்த ரூ.1000 உதவித்தொகை தொடர்ந்து வழங்கப்படும். மகளிர் உரிமைத்தொகை ஏற்கனவே வழங்கப்பட்ட நிலையில், கல்வி உதவித்தொகைக்கான அடுத்த தவணை அடுத்த வாரம் விடுவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.