‘நானும் டாக்டர் தான்’… 10th படிச்சிட்டு ஆங்கில மருத்துவமா?… மக்கள் உயிரோடு விளையாடிய போலி டாக்டர்… சுகாதாரத் துறை அதிரடி ரெய்ட்… போலீஸ் தீவிர ஆக்சன்…!

Spread the love

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் உரிய தகுதியின்றி போலி மருத்துவர்கள் ஆங்கில மருத்துவம் பார்த்து வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்த புகார்களின் அடிப்படையில், மாவட்ட சுகாதாரத் துறையினர் அப்பகுதிகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் பாரதி தலைமையில், நத்தம் வட்டார மருத்துவ அலுவலர் அஜாம் உள்ளிட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் நத்தம் மற்றும் செந்துறை பகுதிகளில் தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.

இந்தச் சோதனையின் போது, செந்துறை பேருந்து நிலையப் பகுதியில் கிளினிக் வைத்து ஒருவர் சட்டவிரோதமாக ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தது அதிகாரிகளால் கண்டறியப்பட்டது. அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில், மருத்துவம் பார்த்து வந்தவர் பாப்பாத்தி (55) என்பதும், அவர் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார் என்பதும் தெரியவந்தது. எவ்வித மருத்துவப் படிப்பும் படிக்காமல் பொதுமக்களின் உயிரோடு விளையாடி வந்த அந்தப் போலி பெண் மருத்துவரைப் பிடித்து அதிகாரிகள் உடனடியாக நத்தம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த நத்தம் காவல்துறையினர் பாப்பாத்தியைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்னும் பல போலி மருத்துவர்கள் நடமாட்டம் இருப்பதாகத் தெரிவிக்கும் அப்பகுதி பொதுமக்கள், மக்களின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு நத்தம் முழுவதும் இயங்கி வரும் அனைத்து தனியார் கிளினிக்குகளிலும் சுகாதாரத் துறையினர் உரிய ஆய்வு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Visaka

Recent Posts

“யார் சாமி நீ… 3 நாள் ஃபர்ஸ்ட் மனைவி… 3 நாள் செகண்ட் மனைவி… 1 நாள் லீவ்…!” – 2 மனைவிகளுடன் கணவன் வாழ… பஞ்சாயத்து போட்ட வினோத கண்டிஷன்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டம் தாடியால் கிராமத்தைச் சேர்ந்த முகமது நசாகத் என்பவருக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு…

10 minutes ago

திக் திக் நிமிடங்கள்…! நடைபாதைக்குள் புகுந்த சொகுசு கார்…. வாலிபர் துடிதுடித்து பலி…! நடுநடுங்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் ஹொலல்கெரே தாலுகாவிற்குட்பட்ட டி. நுலேனூர் அருகே வேகமாக வந்த நான்கு சக்கர வாகனம் ஒன்று…

10 minutes ago

நீட், நெட் முறைகேடுகளால் வெடித்த போராட்டம்… 10 ஆண்டுகளில் 152 வினாத்தாள் கசிவு…! மத்திய அரசை தோலுரித்த ராகுல் காந்தி…!!

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் போட்டித் தேர்வுகள் மற்றும் அரசுப் பணித் தேர்வுகளின் வினாத்தாள்கள் சுமார் 152 முறை கசிந்துள்ளதாகக்…

20 minutes ago

அதிர்ச்சி…! ஜே.சி.பி ஏறி இறங்கி கொடூர விபத்து… மேலூர் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ-வின் மகன் துடிதுடித்து பலி…! சென்னையில் சோகம்…!!

சென்னை வேளச்சேரியில் தங்கி, தனியார் சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மதுரை மாவட்டம் மேலூர் தொகுதியின் முன்னாள்…

24 minutes ago

ஹார்முஸ் ஜலசந்தியில் வெடித்த பதற்றம்…! “ஒரு அடி நகர்ந்தால் டெஹ்ரானை தரைமட்டமாக்குவோம்…” செக் வைத்த அமெரிக்க அதிபர்…. ஈரானுக்கு ட்ரம்ப் கொடுத்த பகீர் வார்னிங்…!!

ஹார்முஸ் ஜலசந்தியில் பயணிக்கும் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால், அந்நாட்டின் தலைநகரான டெஹ்ரானில் உள்ள பாலங்கள் மற்றும் மின்…

30 minutes ago

“பகீர்… இரவில் பாட்டியுடன் தூங்கிய… 17 வயது சிறுவன்… காலையில் நேர்ந்த விபரீதம்…! நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…! கடலூரில் பெரும் பரபரப்பு…!”

கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது 17 வயது மகன் குரு பிரசாத், தினமும்…

35 minutes ago