BIG BREAKING: தலைவர் நீக்கம்… பாஜகவில் அடுத்த பரபரப்பு… நயினார் நாகேந்திரன் ஆக்ஷன்…!

By Nanthini on சித்திரை 3, 2026

Spread the love

பாஜகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் இன்னும் வெளியாகாத சூழலில், தஞ்சை மேற்கு மாவட்டத் துணைத் தலைவர் முரளிதரன் தன்னிச்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திங்கள்கிழமை தனது ராசிக்கு உகந்த நாள் என்பதால் வேட்புமனுத் தாக்கல் செய்ததாக அவர் விளக்கம் அளித்திருந்தாலும், கட்சியின் ஒழுங்குமுறையை மீறி தன்னிச்சையாகச் செயல்பட்டது சர்ச்சையை உருவாக்கியது.

இதனைத் தொடர்ந்து, கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாகக் கூறி, முரளிதரனை பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதாக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கை கட்சிக்குள் நிலவும் கட்டுப்பாட்டை உறுதிப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.