தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் டெட் தேர்வு எழுத உள்ள ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. அதாவது TET தேர்வு எழுத தங்கள் துறையிடமிருந்து தடையில்லா சான்று பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முதன்மை கல்வி அலுவலகங்களில் NOC-க்காக அலையும் வேலை மிச்சம் என ஆசிரியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
சமீபத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் TET தேர்வு கட்டாயமாக்கப்பட்ட நிலையில் ஆசிரியர்களின் கல்வித் தகுதி குறித்து சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணியும் தற்போது தமிழகத்தில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
