தமிழ்நாட்டில் புதிதாக 8,000 தனியார் மருத்துவமனைகளை திறப்பதற்கு தற்காலிக அனுமதி வழங்க தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி ஆன்லைன் மூலம் தேவையான ஆவணங்கள் மற்றும் தகவல்களைப் பதிவேற்றம் செய்த உடனேயே தற்காலிக சான்றிதழ் வழங்கப்படும். இந்த புதிய நடைமுறை மருத்துவச் சேவைகளை விரைவுபடுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள மருத்துவத்துறை அமைச்சர் அருண்ராஜ், விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்ததும் தற்காலிக அனுமதி உடனடியாக வழங்கப்படும் என்று கூறியுள்ளார். அதன் பின்னர், மருத்துவமனைகளில் முழுமையான ஆய்வுகள் மற்றும் சோதனைகள் முறையாக நடத்தப்படும். அந்த ஆய்வுகளுக்குப் பின்னரே நிரந்தர சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
