“40,000 தரேன் சோலிய முடிச்சிருங்க” பள்ளியில் மதிய உணவு சமைக்கும் பெண்ணோடு ஆசிரியருக்கு கள்ள உறவு… இடையூறாக இருந்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

By Soundarya on மார்கழி 1, 2025

Spread the love

ஜார்க்கண்டின் பலாமு மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர், தனது பள்ளியின் மதிய உணவு சமைக்கும் பெண்ணின் கணவரை கொலை செய்ய சதி செய்ததாகக் கூறி, மூன்று கூலி ரவுடிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். ஆசிரியர் சத்யதேவ் விஸ்வகர்மா (50) சமையல்கார பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஆனால் அப்பெண்ணின் கணவர் இதற்கு  இடையூறாக இருந்துள்ளார்.

அவ்வப்போது விஸ்வகர்மாவின் அட்டூழியங்கள் குறித்து சமையல்கார பெண் தனது கணவரிடம் அடிக்கடி புகார் அளித்து வந்துள்ளார்.. இந்த விவகாரம் தொடர்பாக கணவரும் ஆசிரியரும் முன்பு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் அந்தப் பெண்ணின் கணவரைக் கொலை செய்யத் திட்டமிட்ட நிலையில் விஸ்வகர்மா கூலிக்கு அமர்த்தப்பட்ட குற்றவாளிகளைத் தொடர்பு கொண்டு அவர்களுக்கு 40,000 ரூபாய் கொடுத்து கொலை செய்துள்ளார். இதுகுறித்த விசாரணையில் குற்றவாளிகளிடமிருந்து ஒரு கைத்துப்பாக்கி மற்றும் இரண்டு கத்திகள் மீட்கப்பட்டதாக அவர் கூறினார். தாக்குதல் நடத்திய மூன்று பேர் ராஜ்வன்ஷ் பர்ஹியா (52), ராஜு சா (35), மற்றும் மந்து குமார் பர்ஹியா (33) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்
.