தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டவும், தேர்தல் விதிமீறல்களைத் தவிர்க்கவும் நாளை முதல் வரும் 23-ம் தேதி வரை மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. வாக்காளர்களுக்கு மதுபானம் விநியோகம் செய்யப்படுவதைத் தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கையால், இன்று இரவு 10 மணி வரை மட்டுமே கடைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, அடுத்த சில நாட்களுக்கு மதுபானங்கள் கிடைக்காது என்பதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுப் பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று மதுபாட்டில்களைப் போட்டி போட்டு வாங்கிச் செல்வதால் பெரும் கூட்ட நெரிசல் காணப்படுகிறது.
