தமிழகத்தில் தாமரை மலராததற்கு இதுதான் காரணம்… ஒரே போடாய் போட்ட தமிழிசை சவுந்தர்ராஜன்…!

By Nanthini on கார்த்திகை 4, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதிமுக மற்றும் திமுக இடையே போட்டி என்ற நிலைமை மாறி விஜய்யும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் காலம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது. இதனிடையே அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள பாஜக இந்த முறை எப்படியாவது தங்கள் ஆட்சியை தமிழகத்தில் மலர செய்ய வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறது.

அதற்கான வியூகங்களையும் வகுத்து வருகிறது. இந்நிலையில் ECI நேர்மையாக நடப்பதால்தான் தமிழ்நாட்டில் பாஜகவிற்கு ஒரு இடம் கூட கிடைப்பதில்லை என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். வட இந்தியாவில் 21 மாநிலங்களில் வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்ததைப் போல தமிழ்நாட்டிலும் பாஜக கொண்டு வரும் எனவும் பாஜக மதவாத கட்சி அல்ல, மனித வாத கட்சி என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் ஒரு போலியான வாக்காளர் பதிவை திமுக நடத்திவிட்டதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.