தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தற்போது தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்கி விட்டன. அவ்வகையில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள அதிமுக ஆட்சி மீண்டும் தமிழகத்தில் அமைய வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக உள்ளார். ஆனால் கூட்டணி ஆட்சி தான் தமிழகத்தில் அமையும் என்று பாஜக ஒரு பக்கம் கூறிக் கொண்டிருக்கின்றது. இப்படியான நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்றைய செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், அதிமுக -பாஜக கூட்டணி பலமாக உள்ளது. திமுக எதற்காக அடுத்த கட்சிகளை பற்றி கவலைப்படுகிறது.
எங்கள் கூட்டணியை கண்டு திமுக பதறுவது ஏன்? இது வெற்றி கூட்டணி. அதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. மோடி, அமித்ஷா பல மாநிலங்களில் தேர்தல் வெற்றியை பார்த்தவர்கள். நிச்சயம் அவர்களால் அதை தமிழகத்திலும் சாத்தியப்படுத்த முடியும். தமிழக மக்கள் திமுக ஆட்சியில் பரிதவித்து வருகின்றனர். திமுக அரசை ஆட்சியில் இருந்து நீக்குவதன் மூலம் மட்டுமே தமிழக மக்களுக்கு நிம்மதியை தர முடியும். 2026 தேர்தலில் அது கட்டாயம் நடக்கும். எங்கள் கூட்டணிக்கு பெரிய கட்சிகள் நிச்சயம் வருவார்கள். அப்போது இதைவிட வலுவான கூட்டணியாக நாங்கள் இருப்போம் என்று தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியுள்ளார்.
தமிழக அரசியலில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்டுள்ள நேரடி அரசியல் வருகை பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெரம்பூர் மற்றும்…
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே விடுமுறைக்கு வந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சமையல் மாஸ்டர் போக்சோ…
ஈரானின் உச்ச தலைவராக சுமார் 35 ஆண்டுகள் பதவி வகித்த அயதுல்லா அலி காமேனி, பிப்ரவரி 28 அன்று அமெரிக்க…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நாளை மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது. திமுக,…
ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) பதவியிலிருந்து டிம் குக் வரும் செப்டம்பர் மாதம் விலக உள்ளதாக அந்த…
கேது பகவான் தனது சொந்த நட்சத்திரமான மகம் நட்சத்திரத்திற்குள் ஏப்ரல் 20-ம் தேதி பிரவேசித்துள்ள நிலையில், டிசம்பர் 5, 2026…