ஈரோட்டில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் தமிழருவி மணியன் தலைமையிலான காமராஜர் மக்கள் கட்சி இணையும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் ஜிகே வாசன் தமிழருவி மணியனுக்கு வேல் வழங்கி தனது கட்சியில் இணைத்துக் கொண்டார். பிறகு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழருவி மணியன், விஜய் தன்னுடைய அரசியல் எதிரியான திமுகவை வீழ்த்த தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற வேண்டும். அப்படி இல்லை என்றால் ஆந்திராவில் நடிகர் சிரஞ்சீவிக்கு ஏற்பட்ட பரிதாபமான நிலைதான் விஜய்க்கும் ஏற்படும்.
தேர்தலில் சிரஞ்சீவியாக இருப்பதா இல்லை பவன் கல்யாண் ஆக இருப்பதா என்ற இரண்டு வாய்ப்பு மட்டுமே விஜய்க்கு உள்ளது. 1967ஆம் ஆண்டு அண்ணாவும் ராஜாஜியும் கூட்டணி அமைத்தது சாத்தியம் என்றால், அதிமுக மற்றும் பாஜக, விஜய் ஒரே அணியில் நிற்பது சாத்தியமே. எதிர் வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் அரசியல் எதிரியை வீழ்த்த தான் விஜய் பாடுபட வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் கொள்கை எதிரியை பார்த்துக் கொள்ளலாம் என்று தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். இவருடைய இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தைப் படைக்கும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று தமிழக முதல்வராகப்…
முந்தைய திமுக அரசு மே மாதம் வரையிலான தொகையை ஏற்கனவே வங்கிக் கணக்குகளில் செலுத்திவிட்ட நிலையில், அடுத்த மாதத்திற்கான தொகை…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய், சமீபத்தில் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலுக்குச் சென்று விஸ்வரூப தரிசனம் செய்தார். பொதுவாக…
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் இன்று தொடங்குகிறது. தமிழக சட்டசபைத் தேர்தலில் 108 இடங்களை வென்ற தமிழக…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெறும் 47 இடங்களை மட்டுமே பெற்று மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது, அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை…
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு (EPS) எதிராகப் போர்க்கொடி தூக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும்…