காங்கிரஸ் கட்சியில் பல ஆண்டுகளாக இருந்தவர் தமிழருவி மணியன். இலக்கிய பேச்சாளர். எழுத்தாளர். பிறகு ஒரு கட்டத்தில் காந்திய மக்கள் இயக்கம் என்ற அரசியல் இயக்கத்தை துவங்கினார். சமீபத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் ஜிகே வாசனுடன் தனது கட்சியை இணைத்து விட்டார். ரஜினிக்கு அரசியலுக்கு வர வேண்டும் என்பதில் அதீத ஆர்வம் காட்டியவர்களில் தமிழருவி மணியனும் ஒருவர்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய தமிழருவி மணியன் கூறியதாவது, நடிகர் ரஜினியிடம் 3 ஆண்டுகளாக மாற்று அரசியல் பேசி பேசி 3 கோப்பை மிளகு ரசம் குடித்தது தான் மிச்சம். கணிசமாக வாக்கு உள்ள விஜய் சிந்திக்க வேண்டும். பாஜக அதிமுகவின் 41 சதவீத வாக்குகளுடன் விஜயும் இணைந்தால் தமிழகத்தில் 200 தொகுதிகளில் வெற்றி பெறலாம் தாமகவில் இணைந்த தமிழருவி மணியன் கூறியிருக்கிறார்.
