ஆன்லைன் பொருட்களை விநியோகிக்கக்கூடிய தொழிலாளர்கள் மின்சார ஸ்கூட்டர் வாங்குவதற்கு 20,000 மானியம் வழங்கும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், தமிழக சட்டசபையில் கடந்த மார்ச் 14ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கையில், வேகமாக வளர்ந்து வரும் இணையம் சார்ந்த பொருளாதார சூழலில் இணையம் சார்ந்த சேவை பணிகளில் ஈடுபடும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.
இந்த தொழிலாளர்களின் நலனுக்காக இணையம் சார்ந்த தற்சார்பு தொழிலாளர்கள் நல வாரியம் உருவாக்கப்பட்டது. இந்த நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக 2000 பேருக்கு புதிய மின்சார ஸ்கூட்டர் வாங்குவதற்கு தலா ₹20,000 மானியமாக வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இணையம் சார்ந்த சேவை பணிகளில் ஈடுபடும் 2000 பேருக்கு 20000 ரூபாய் மானியமாக வழங்கும் திட்டத்திற்கு நான்கு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…
திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…