தமிழக வீட்டு வசதி வாரியத் திட்டத்தின் கீழ் வீடு, மனை அல்லது குடியிருப்பு ஒதுக்கீடு பெற்ற தவணை தொகையை செலுத்த தவறிய பொதுமக்களுக்கு தற்போது நிம்மதி அளிக்கும் விதமாக ஒரு குட் நியூஸ் வெளியாகியுள்ளது. அதாவது குறிப்பிட்ட காலத்திற்குள்நிலுவைத் தொகையை முழுமையாக செலுத்தும் பயனாளிகளுக்கு அபராத வட்டி, முதலாக்கத்தின் மீதான வட்டி ஆகியவை முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பல வருடங்களாக விற்பனை பத்திரம் பெற முடியாமல் தவித்த குடும்பங்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. மக்களின் கோரிக்கையை ஏற்று வீட்டு வசதித் துறை அமைச்சர் சட்டப்பேரவையில் வெளியிட்ட அறிவிப்பை நிறைவேற்றும் விதமாக தமிழக அரசு தற்போது இந்த அரசாணையை வெளியிட்டுள்ளது.
இந்த வட்டி தள்ளுபடி சலுகையானது மார்ச் 31 2015க்கு முன்பாக தவணைக்காலம் முடிவடைந்த வீட்டு வசதி வாரிய திட்டங்களுக்கு மட்டும் பொருந்தும். தகுதி உள்ள பயனாளர்கள் தங்களுடைய நிலுவை தொகையை தாமாக முன்வந்து முழுவதுமாக செலுத்தினால் மாதத் தவணை தாமதமாக செலுத்துதற்காக விதிக்கப்பட்ட அபராத வட்டி முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். இந்த வட்டி தள்ளுபடி சலுகை திட்டமானது மார்ச் 31 2026 வரை அமலில் இருக்கும். எனவே நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பயனாளர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி தங்களுடைய நிலுவை தொகையை முழுமையாக செலுத்தி வட்டி சுமையிலிருந்து விடுபட்டுக் கொள்ளலாம்.
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…
அண்ணா பல்கலைக்கழக ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையிலிருந்த திமுக அனுதாபி ஞானசேகரன், திடீரென அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருப்பது…
ஜப்பானில் அண்மையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அந்நாட்டு அரசு விடுத்த "திரும்பிப் பார்க்காமல் ஓடுங்கள்" என்ற எச்சரிக்கை உலக…
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே சந்தேகத்தின் பெயரால் கணவனே மனைவியைக் கழுத்தறுத்துக் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும்…
ஐபிஎல் 2024 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் (GT) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (MI) அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு முன்னதாக, ரோஹித்…
கென்ய நாட்டின் பாரம்பரிய மற்றும் மிகவும் பிரபலமான இனிப்பு வகை சிற்றுண்டியான மாண்டாசி (Mandazi), லேசான இனிப்புச் சுவையுடன் எண்ணெயில்…