ஷாக் நியூஸ்… இனி மே மாதம் சம்பளம் கிடையாது…. ஆசிரியர்களுக்கு செக் வைத்த தமிழக அரசு….!

By Nanthini on சித்திரை 10, 2026

Spread the love

கல்வியாண்டுக்கு நடுவே ஓய்வுபெறும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களின் நலன் கருதி அந்த கல்வியாண்டு முடியும் வரை பணி நீட்டிப்பு பெறுவது வழக்கமான நடைமுறையாக இருந்து வந்தது. இருப்பினும், தற்போது பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, பொதுத்தேர்வுகள் முடியும் வரை மட்டுமே பணி நீட்டிப்பு வழங்கப்படும் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, ஏப்ரல் மாதத்துடன் பணி நீட்டிப்பு நிறைவடைவதால், ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை காலமான மே மாதத்திற்கான ஊதியம் கிடைக்காத சூழல் உருவாகியுள்ளது. இதற்கான அரசாணை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், தற்போதுதான் இது முழுமையாக நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது ஆசிரியர்களிடையே பெரும் கவலையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.