பட்டா, சிட்டா ஆவணம்… தமிழக அரசு புதிய மாற்றம்… இனி ரொம்ப ஈஸி…..!

By Nanthini on ஐப்பசி 9, 2025

Spread the love

தமிழகத்தில் சொத்துக்களை வாங்குவது மற்றும் விற்பதில் உள்ள சிக்கல்களை குறைப்பதற்காக ஆளில்லா பதிவு (persenceless registration) முறையை அறிமுகப்படுத்த தமிழக அரசு தற்போது தயாராகி வருகிறது. அதன்படி சொத்துக்களை விற்பவரோ அல்லது வாங்குபவரோ பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு செல்லாமல் ஆன்லைனில் பதிவு நடைமுறைகளை செய்ய முடியும். சார்பதிவாளர் ஆன்லைனிலேயே விண்ணப்பத்தை சரிபார்த்து ஒப்புதல் வழங்குவார். இந்த வருடம் இறுதிக்குள் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.