BREAKING: சிலிண்டர் தட்டுப்பாடு… சலுகை அறிவித்தது தமிழக அரசு…. சூப்பர் அறிவிப்பு….!

By Nanthini on பங்குனி 14, 2026

Spread the love

வணிக ரீதியிலான சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் அதன் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு, உணவக உரிமையாளர்கள் மற்றும் சிறு வணிகர்களின் சுமையைக் குறைக்க தமிழக அரசு ஒரு முக்கிய சலுகையை அறிவித்துள்ளது. இதன்படி, சிலிண்டர் தட்டுப்பாடு நீடிக்கும் காலவரை, உணவகங்கள் மற்றும் டீ கடைகளில் மின்சார பயன்பாட்டிற்கான கட்டணத்தில் ஒரு யூனிட்டிற்கு ₹2 மானியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயனுள்ள சலுகை ஹோட்டல் தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமன்றி, வீடுகளிலேயே சமைத்து உணவு விற்பனை செய்யும் சிறு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. எரிபொருள் நெருக்கடியான இக்காலத்தில், மின்சார அடுப்புகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் இந்த அரசு நடவடிக்கை, வணிகர்கள் தங்கள் தொழிலைத் தடையின்றித் தொடரவும், விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும் பேருதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.