“காலையில உயிரோட இருப்போமா” அந்த பயத்திலேயே தூங்க போறோம்… எங்களை காப்பாத்துங்க… ஈரானில் சிக்கிய தமிழக மீனவர்கள் அரசுக்கு கண்ணீர் கோரிக்கை..!!

Spread the love

ஈரானில் நிலவி வரும் தீவிரமான போர்ப் பதற்றங்களுக்கு இடையே, அங்கு மீன்பிடித் தொழிலுக்காகச் சென்ற கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் நடுக்கடலில் சிக்கித் தவித்து வருகின்றனர். ஏவுகணைத் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில், தங்கள் உயிருக்கு எவ்விதப் பாதுகாப்பும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த மீனவர்கள் வீடியோ ஆதாரங்களை வெளியிட்டுள்ளனர். தங்களை உடனடியாக மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் தலையிடக் கோரி மீனவர்களின் குடும்பத்தினர் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் முன்னிலையில் அளிக்கப்பட்ட இந்த மனுவில், வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் ஈரானில் உள்ள இந்தியத் தூதரகம் மூலமாக மீனவர்களைப் பாதுகாப்பாகத் தாயகம் அழைத்து வர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. வளைகுடா பிராந்தியத்தில் போர் பதற்றம் அதிகரித்துள்ளதால், மீனவர்களின் பாதுகாப்பு குறித்து அவர்களது குடும்பத்தினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

Soundarya

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

7 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

8 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

8 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

8 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

8 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

8 மணத்தியாலங்கள் ago