தமிழக அரசியலில் அடுத்த திருப்பம்… விசிக தலைவரை வறுத்தெடுத்த த.வெ.க… பிளாஸ்டிக் நாற்காலி அரசியல் இன்னும் புரியலையா அண்ணா…?

By SATHISH R on ஆனி 28, 2026

Spread the love

தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் இடையே வார்த்தைப் போர் தீவிரமடைந்துள்ளது. அண்மையில் சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் மற்றும் முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறித்து விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்த கருத்துகளுக்கு த.வெ.க. தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது தொடர்பாக மதுரை மத்திய தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கை, தற்போதைய அரசியல் சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விசிக தலைவர் திருமாவளவன் தங்களின் த.வெ.க. ஆட்சியின் அங்கமாக இருந்துகொண்டே, தங்களை விமர்சிப்பது அரசியல் மரபாகுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். “வாளும், வார்த்தையும் வீச வேண்டிய திசை எது என்று அறியாமல் திருமாவளவன் திகைத்து நிற்கிறார்” என்று விமர்சித்துள்ள முஸ்தபா, சட்டசபையில் தங்களுக்கு எதிராக வன்மமான கோஷங்கள் எழுப்பப்பட்டபோது அமைதி காத்த திருமாவளவனின் போக்கையும் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், அவதூறுப் பட்டியல்களும், பிளாஸ்டிக் நாற்காலி அரசியலும் இன்னும் உங்களுக்குப் புரியவில்லையா அண்ணா? என்றும் அவர் வினவியுள்ளார்.

   

மக்கள் தலைவர் விஜய்யின் தலைமையில் அமைந்துள்ள தற்போதைய த.வெ.க. ஆட்சியில் பங்கேற்றுவிட்டு, மறுபுறம் விமர்சனப் பார்வையில் பேசுவது எந்த விதத்தில் நியாயம் என்கிற ரீதியில் இந்த அறிக்கை அமைந்துள்ளது. தமிழக சட்டமன்றத்தில் நடந்த விவாதங்களைத் தொடர்ந்து, கூட்டணிக் கட்சிகளுக்குள்ளும், தற்போதைய ஆளுங்கட்சிக்கும் விசிகவிற்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல் போக்கு, வரும் நாட்களில் தமிழக அரசியலில் எந்த மாதிரியான திருப்பங்களை ஏற்படுத்தப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.