![suya - Tamizhanmedia.net](https://tamizhanmedia.net/wp-content/uploads/2024/05/suya.jpg)
CINEMA
வெற்றிமாறன் மீது கடும் கோபத்தில் இருக்கும் சூர்யா… அட கடவுளே.. அப்போ வாடிவாசல் கதவு திறக்காது போலயே..!!
வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. வெற்றிமாறன் விடுதலை படத்தில் பிஸியாக இருந்தார். அதே நேரம் சூர்யா கங்குவா திரைப்படத்தில் பிஸியாக நடித்து கொண்டிருந்தார். இப்போது கங்குவா படத்தின் ஷூட்டிங் முடிவடைந்தது.
இதனால் வாடிவாசல் படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதற்கிடையே அமீர், கார்த்தி, ஞானவேல் ராஜா ஆகியோர் பிரச்சனை நடந்தது. வாடிவாசல் திரைப்படத்தில் அமீரும் இருப்பதால் சூர்யா அந்த படத்தில் நடிப்பாரா மாட்டாரா என்ற கேள்வி எழுந்தது. அமீர் தரப்பில் சூர்யாவுடன் நடிக்க தயாராக இருப்பதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. சூர்யா வாடிவாசல் படத்தில் நடிப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் வெற்றிமாறன் யாருக்கும் தெரியாமல் சூர்யாவிடமும் கூறாமல் நடிகர் ராம்சரணிடம் சென்று வாடிவாசல் கதையை கூறினார். ஆனால் ராம்சரண் வாடிவாசல் கதை பிடிக்கவில்லை என கூறிவிட்டாராம். இதனால் அவரும் அந்த படத்தில் நடிப்பதாக இல்லை. இந்த விஷயம் சூர்யாவுக்கும் தெரியவந்தது. இதனால் அவர் வெற்றிமாறன் மீது அதிருப்தியில் உள்ளாராம்.
எனவே வாடிவாசல் படத்தில் சூர்யா நடிப்பது சந்தேகம்தான் என கூறப்படுகிறது. மேலும் வெற்றிமாறன் சமீப காலமாக பல மேடைகளில் நடிகர் விஜயை சிலாகித்து பேசி வருகிறார். இதன் காரணமாகவும் சூர்யா தர்ம சங்கடத்தில் வாடிவாசல் படத்தில் இருந்து விலகி விடுவார் என கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த எந்தவித அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. மேற்கூறிய தகவலை வலைப்பேச்சு யூடியூப் சேனலில் கூறியுள்ளனர்.