#image_title
நடிகர் சூர்யாவும், கார்த்திக்கும் இனி தங்களது சொந்த புரொடக்ஷன் கம்பெனியான 2d என்டர்டைன்மென்ட் நிறுவனத்தில் நடிக்கப் போவதில்லை என்று தெரிவித்திருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் பலம்பெறும் நடிகர் சிவகுமார். மிக பிரபலமான கண்ணியமான நடிகர்களில் ஒருவராக வளம் வந்தவர். இவர்களின் இரண்டு மகன்கள் தான் சூர்யா மற்றும் கார்த்திக். தனது தந்தையின் பெயருக்கு களங்கம் வந்து விடாமல் தற்போது வரை சிறப்பாக சினிமாவில் நடித்து வருகிறார்கள். நடிகர் சூர்யா ஆரம்பத்தில் பல விமர்சனங்களை பெற்றிருந்தாலும் தொடர்ந்து தற்போது சிறந்த கதைகளை தேர்வு செய்து முன்னணி நடிகராக வலம் வருகின்றார்.
அதேபோல நடிகர் கார்த்திக்கும் சிறந்த படங்களை தேர்வு செய்து நடித்து முன்னணி நடிகராக வலம் வருகின்றார். இருவரும் சினிமாவில் பிஸியாக இருந்து வருகிறார்கள். நடிகர் சூர்யா தற்போது கங்குவார் திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடித்து வருகின்றார். அதேபோல நடிகர் கார்த்திக்கும் தற்போது மித்ரன் இயக்கத்தில் சர்தார் 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
சூர்யா ஜோதிகா இருவரும் இணைந்து 2d என்ற என்டர்டைன்மென்ட் நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். இந்த நிறுவனத்தின் மூலமாக ஏகப்பட்ட திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் சூர்யா இனிமேல் 2d என்டர்டைமென்ட் நிறுவனம் சார்பாக எந்த திரைப்படத்திலும் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார். அதேபோல நடிகர் கார்த்திக்கும் அப்படி ஒரு முடிவைத்தான் எடுத்திருக்கின்றார்.
நடிகர் கார்த்திக் நடித்திருக்கும் பல படங்கள் 2d என்டர்டெயின்மென்ட், ஸ்டுடியோ கிரீன், ஞானவேல் ராஜா, பிரின்ஸ் பிக்சர் உள்ளிட்ட அவர்களின் உறவினர்களின் தயாரிப்பில் தான் தற்போது வரை பல படங்களில் நடித்திருக்கின்றார். இனிமேல் இவர்களை எல்லாம் தவிர்த்து வேறு நிறுவனங்களின் படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாக கூறப்படுகின்றது. இதற்குப் பின்னால் ஒரு காரணமும் இருக்கின்றது என்று தகவல் வெளியாகியிருக்கின்றது.
அதாவது சூர்யா 2d என்டர்டைன்மெண்டில் நடிக்க கூடாது என்று முடிவெடுத்ததற்கும் கார்த்திக் நடிக்க கூடாது என்று முடிவெடுத்ததற்கும் பின்னால் இருப்பது ஒரே காரணம் தானாம். தற்போது சாட்டிலைட் பிசினஸ் தரமட்டம் ஆகிவிட்டது. அதனால் படம் எடுக்கும் எல்லா தயாரிப்பாளர்களுக்கும் நஷ்டம் என்பது உறுதியாகிவிட்டது. இதனால் நம்ம நிறுவனத்தில் நம்ம நடிச்சாலும் சாட்டிலைட் பிசினஸில் லாபம் இல்லை என்பதால் நஷ்டம் ஏற்படும். அவர்களை காப்பாற்றுகிற நோக்கத்தில் தான் அவர்கள் தயாரிப்பில் அடிப்பதில்லை என்று முடிவெடுத்து இருக்கிறார்களாம்.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…