ஆர்.கே செல்வமணி இயக்கத்தில் கடந்த 1992-ஆம் ஆண்டு செம்பருத்தி திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் பிரசாந்த் ஹீரோவாக நடித்தார். ரோஜா ஹீரோயினாக நடித்தார். இந்த படத்தில் மன்சூர் அலிகான், நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். செம்பருத்தி படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
![]()
இந்த நிலையில் செம்பருத்தி படத்தில் முதலில் நடிக்க வந்தது பிரசாந்த் இல்லையாம். பட குழுவினர் முதலில் பிரபல நடிகரான சூர்யாவை தான் செம்பருத்தி படத்தில் நடிக்க அழைத்துள்ளனர். முதலில் சூர்யா சினிமாவில் நடிக்க ஆர்வம் இல்லாமல் இருந்துள்ளார். தான் ஹீரோவாக நடித்தால் நன்றாக இருக்குமா? என அவருக்கே தயக்கம் இருந்தது.
சூர்யா முதன் முதலில் நடித்த படம் நேருக்கு நேர். அதன் பிறகு தான் அடுத்தடுத்த வெற்றி படங்களில் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார். அப்படி இருக்க நேருக்கு நேர் படத்தில் நடிப்பதற்கு முன்னரே செம்பருத்தி படத்தில் நடிக்க இயக்குனர் சூர்யாவை அணுகி கேட்டுள்ளார். அப்போது சிவக்குமார் தன் மகன் படித்துக் கொண்டிருந்ததால் இப்போதைக்கு படத்தில் நடிக்க வேண்டாம் என கூறிவிட்டதாக தெரிகிறது.

இதனால் தான் பிரசாந்த் செம்பருத்தி படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த தகவலை பிரபல நடிகர் ஆன சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார். நடிகர் சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான கங்குவா படத்தில் நடித்துள்ளார். மாபெரும் பட்ஜெட்டில் பல மொழிகளில் கங்குவா படம் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
![]()
