Categories: சினிமா

ஒரு நாளைக்கு 21 மணி நேரம் அஜித் உழைக்கிறாரு.. அவருக்கு நடந்தது ஆபரேஷனே கிடையாது.. உண்மையை ஒரே போடாய் போட்ட அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா..!!

Spread the love

அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி திரைப்படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் அர்பைஜானில் நடைபெற்றது. 70 சதவீத படபிடிப்பு முடிந்த நிலையில் தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் ஆதி ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் ஷூட்டிங்கும் விறுவிறுப்பாக தொடங்கியது. ஆபரேஷன் செய்து கொண்ட அஜித் ஓய்வெடுக்க போகிறார் என்று இணையத்தில் செய்திகள் உலா வருகிறது.

இந்த நிலையில் அஜித்தின் நண்பரும் மேலாளருமான சுரேஷ் சந்திரா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது, அஜித் சாரை பொருத்தவரை ஒரு தயாரிப்பு நிறுவனத்திற்கு உடனே ஓகே சொல்ல மாட்டார். முன்னதாக வாக்கு கொடுத்திருக்கும் தயாரிப்பு நிறுவனத்தின் கமிட்மெண்டை முடித்துவிட்டு தான் இன்னொரு கம்பெனிக்கு வருவார். லைக்கா நிறுவனத்திற்கு வேறு சில பிரச்சனை இருந்தது. இதனால் 70% படபிடிப்பை அங்கு முடித்து விட்டோம். ஒரு சில காரணங்களால் ஷூட்டிங் தள்ளிப்போனது. பிப்ரவரி மாதமே ஷூட்டிங் முடித்துவிட்டு ஒரு சில மாதம் ஓய்வெடுத்து விட்டு குட் பேட் அக்லி படத்தில் நடிக்கலாம் என முடிவு இருந்தது.

ஆனால் எதிர்பாராதவிதமாக விடாமுயற்சி படத்தின் சூட்டிங் தாமதமானது. மேலும் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங்கை ஆரம்பிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஐந்தாம் தேதியிலிருந்து அஜித் சார் ஒரு நாளைக்கு 21 மணி நேரம் உழைக்கிறார். குட் பேட் அக்லி, விடாமுயற்சி என இரண்டு படத்தின் ஷூட்டிங்கிலும் அஜித் கலந்து கொள்கிறார். சொல்லப்போனால் 20 வருஷங்களுக்கு பிறகு அஜித் சார் இப்படி நடிக்கிறார். எப்படியாவது படத்தை முடித்துக் கொடுக்க வேண்டும் என்பதற்காக கஷ்டப்பட்டு உழைக்கிறார். அவரது கவனம் இரண்டு படங்களையும் முடித்துக் கொடுப்பதில் தான் இருக்கிறது.

அஜித் சாருக்கு மூளையில் ரத்தக்கட்டி இருக்கு ஆபரேஷன் பண்ணனும் என்ற செய்திகள் இணையத்தில் உலா வருகிறது. அதெல்லாம் பொய். அவருக்கு நடந்தது ஆபரேஷன் இல்ல. ஒரு புரோசிஜர் தான். ஆப்ரேஷன் என்பது மேஜரான விஷயம். ஆனால் அஜித் சாருக்கு நடந்தது ஆஞ்சியோகிராம் பண்ற மாதிரி சின்ன புரோசீஜர் தான். முன்னாடி நடிச்ச ஒரு பட ஷூட்டிங்கில் நடந்த சம்பவத்தால் இந்த பிரச்சனை வந்திருக்கு. அவர் சினிமாவில் நுழைந்து 30 ஆண்டுகள் கடந்து விட்டது. இது வெறும் வார்த்தை கிடையாது. அவளது அனுபவம். அதான் உண்மை என சுரேஷ் சந்திரா கூறியுள்ளார்.

admin

Recent Posts

“தனிமையில் இருக்கலாம் வா.. போனில் அழைத்த காதலி”… ஹோட்டலுக்கு சென்ற காதலனுக்கு காத்திருந்த அதிர்ச்சி… ஆக்ராவில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், தன்னைத் தொடர்ந்து மிரட்டி வந்த முன்னாள் காதலனை இளம்பெண் ஒருவர் ஓட்டல் அறைக்குள் வைத்து…

10 minutes ago

அரசியல்வாதிகளின் அறைகளுக்குள் நுழையாமல்… பெண்களால் அரசியலுக்கு வர முடியாது… பப்பு யாதவின் சர்ச்சை கருத்தால் பற்றி எரியும் அரசியல்..!!

பெண் அரசியல்வாதிகள் குறித்துப் பீகார் மாநிலம் பூர்ணியா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பப்பு யாதவ் தெரிவித்துள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்கள் நாடு…

11 minutes ago

“ஈரானை விடமாட்டோம்!”: கடல்புறமாக வளைத்துப்பிடித்த அமெரிக்கா… உயிர்ச் சேதங்கள் மோசமாக இருக்கும்”… வல்லுநர்கள் எச்சரிக்கும் 2026-ன் மிகப்பெரிய வளைகுடா போர்?…!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் நாளை புதன்கிழமையுடன் முடிவுக்கு வரும் நிலையில், மத்திய கிழக்கில்…

14 minutes ago

“தப்பிக்க 3 செகண்ட் தான் இருந்தது” என் கண் முன்னே சாம்பலாகி போயிட்டாங்க… திருச்சூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிர் பிழைத்தவர் பகீர் வாக்குமூலம்..!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள ஒரு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் சிக்கி 12 பேர் பலியாகினர்.…

15 minutes ago

ஈரானின் ‘மரணப் பொறி’..? கடல் கண்ணிவெடிகளுக்கு நடுவே சிக்கிய கப்பல்கள் – மீட்க களமிறங்கும் IMO… உலகத்தையே உலுக்கும் கப்பல் போக்குவரத்து நெருக்கடி…!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிர போர் பதற்றம் காரணமாக, பெர்ஷியன் வளைகுடாவில் நூற்றுக்கணக்கான வணிகக் கப்பல்கள் கடந்த 54…

17 minutes ago

அலெர்ட்..! கோடை வெயிலில் தவறியும் “பாராசிட்டமால்” மாத்திரை போடாதீங்க… பொதுச் சுகாதாரத்துறை அதிரடி எச்சரிக்கை.!!

கோடை வெயில் அதிகரித்துள்ள நிலையில், வெப்பத்தினால் ஏற்படும் உடல் உபாதைகளுக்குப் பொதுமக்கள் சுயமாகப் பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க…

20 minutes ago