உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத் பகுதியில் நான்கு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், அம்மாநில காவல்துறையின் மெத்தனப் போக்கை உச்ச நீதிமன்றம் மிகக் கடுமையாகச் சாடியுள்ளது. சிறுமியின் பிறப்புறுப்பில் மழுங்கிய பொருள் இருந்ததாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிந்த பின்னரும், காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கைப் பதிவு செய்யாதது நீதிபதிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் காவல்துறையின் அணுகுமுறை “உணர்ச்சியற்றது” என்று விமர்சித்த தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு, காசியாபாத் காவல் ஆணையர் மற்றும் சம்பந்தப்பட்ட ஆய்வாளர் ஆகியோர் ஏப்ரல் 13 அன்று அனைத்து ஆவணங்களுடன் நேரில் ஆஜராக வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிறுமி உயிருடன் இருந்ததற்கான ஆதாரங்கள் இருந்தும் காவல்துறையினர் போதிய அக்கறை காட்டவில்லை என்றும், வழக்கை வாபஸ் பெறச் சொல்லி தந்தை மிரட்டப்படுவதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், இரத்தப்போக்கால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சிறுமியை அனுமதிக்க மறுத்த இரண்டு தனியார் மருத்துவமனைகளுக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும் நீதியை உறுதி செய்யும் பொருட்டு, இந்த வழக்கை நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழு அல்லது மத்திய புலனாய்வு முகமை விசாரிக்க வாய்ப்புள்ளதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு எவ்வித நெருக்கடியும் அளிக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ள நீதிபதிகள், வழக்கை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில், அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது…
சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப் பதிவு…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனது…
கடலூர் மாவட்டத்தின் ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், திமுக ஆட்சியைத் தொடர…