Categories: CINEMA

‘விஜய் சொன்னது தப்புன்னு நிரூபிக்கணும்னு அந்த படம் பண்ணேன்… கடைசில பல்பு எனக்குதான்’ – சுந்தர் சி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 வருடங்களாக கமர்ஷியல் இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. அவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், வின்னர், கிரி, கலகலப்பு என ஏராளமான படங்கள் கமர்ஷியலாக பெருவெற்றி பெற்றுள்ளன. முறைமாமன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சுந்தர் சி காமெடி, கிளாமர், ஆக்‌ஷன் என கலந்து கட்டி மசாலா படமாக எடுத்து முன்னணி இயக்குனர் ஆனார்.

இதற்கிடையில் அவர் தலைநகரம் திரைப்படத்தின் மூலமாக நடிகர் ஆனார். அந்த படம் வெற்றி பெற்றதையடுத்து தொடர்ந்து பல படங்களில் கதாநாயகனாக நடித்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அவர் படங்கள் சரியாக ஓடாத போது மீண்டும் கலகலப்பு படம் மூலமாக இயக்குனர் ஆனார். அதன் பின்னர் நடிப்பு இயக்கம் என இரட்டைக் குதிரைகளில் சவாரி செய்து வருகிறார்.

தற்போது அவர் இயக்கியுள்ள அரண்மனை 4 படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று ஓடி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ப்ரமோஷனுக்காக அவர் அளித்த ஒரு நேர்காணலில் தன்னுடைய சினிமா வாழ்க்கையின் சுவாரஸ்யமான தருணங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார். அப்போது அனைத்து முன்னணி நடிகர்களோடும் படம் பண்ணிய நீங்கள் ஏன் விஜய்யோடு மட்டும் படம் பண்ணவில்லை எனக் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர் “விஜய் சார் முழு கதையையும் கேட்டுவிட்டுதான் படம் நடிப்பார். ஆனால் நான் யாரிடமும் கதை சொன்னதில்லை. என்னை நம்பி வரும் ஹீரோக்களை வைத்துதான் நான் படம் பண்ணுகிறேன். அது மட்டுமில்லாமல் எனக்குக் கதையை விலாவாரியாக சொல்லவும் தெரியாது. அதனால்தான் நான் விஜய்யோடு இணைந்து படம் பண்ண முடியாமல் போய்விட்டது.

ஆனால் சிலமுறை அவரோடு படம் பண்ண வேண்டிய சூழல் அமைந்தும் சில காரணங்களால் அது நடக்காமல் போனது. கடைசியாக நான் அவருக்கு ஒரு கதை சொன்னேன். அதன் முதல் பாதி அவருக்கு பிடித்திருந்தது. ஆனால் இரண்டாம் பாதி பிடிக்கவில்லை என சொல்லிவிட்டார். நான் அவர் சொன்னது தவறு என நிரூபிக்கும் விதமாக அந்த படத்தை வேறொரு ஹீரோவை வைத்து எடுத்தேன். கடைசியில் விஜய் சொன்னதுதான் உண்மை ஆனது.

அந்த படம் ஓடவில்லை. அது எந்த படம் என்று மட்டும் சொல்லமாட்டேன். அதில் நடித்த ஹீரோவின் மனம் புண்படும்” எனக் கூறியுள்ளார். ஆனால் பலரும் அந்த வீடியோவின் கமெண்ட் பகுதியில் அவர் சொல்லும் படம் விஷால் நடித்த ஆக்‌ஷன் படம்தான் எனக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

vinoth

Recent Posts

3d எஃபெக்டில், 10 மொழியில் கலக்க வரும் நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’.. ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் பண்ண படக்குழு..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…

14 hours ago

அடுத்த படத்திற்கு வெற்றி கூட்டணியுடன் கைகோர்க்கும் சித்தார்த்.. 40-வது படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…

15 hours ago

பாக்குறதுக்கு மட்டும் தான் அழகு.. பாட்டெல்லாம் சுத்த வேஸ்ட்.. அவங்க ஒரு Fake சிங்கர்.. பாடகி ஸ்ரேயா கோஷலை சீண்டிய சுசித்ரா..!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…

16 hours ago

என்னது..! தனுசுக்கும் மீனாவுக்கும் திருமணமா..? கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா.. பிரபல சினிமா விமர்சனம் பகிர்ந்த ஆதங்கம்..!

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…

17 hours ago

சினிமா ராணி டி பி ராஜலட்சுமிக்கு இந்த நிலைமை?… விருது விழாவுக்கு செல்ல முடியாத தர்மசங்கட சூழல்… MGR செய்த உதவி!

தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…

19 hours ago

சீரியல்ல மட்டும் தான் குடும்ப குத்து விளக்கு.. நிஜத்துல இவ்வளவு மாடனா.. எதிர்நீச்சல் சீரியல் ஜனனியின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…

19 hours ago