Categories: சினிமா

குடோனில் சிக்கி கிட்ட ஆனந்தி.. மகேஷுக்கு போன் போடும் வார்டன்.. பரபரப்பான திருப்பங்களுடன் சிங்க பெண்ணே..!

Spread the love

சிங்க பெண்ணே சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை குறித்து இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.

சன் டிவியில் தற்போது மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் சிங்க பெண்ணே. இந்த சீரியலில் இன்று எப்போதுமே திட்டம் போட்டு தோற்றுப் போகும் மித்ரா இந்த முறை அரவிந்தோடு கைகோர்த்து திட்டத்தில் ஜெயித்திருக்கிறார். அரவிந்த், மித்ரா, கருணாகரன் மூவரும் விரித்த சதி வலையில் ஆனந்தி மற்றும் அன்பு இருவரும் சிக்கிக் கொள்கிறார்கள்.

ஸ்டாக் எடுக்க போன போது அன்பு மற்றும் ஆனந்தி குடோனுக்குள் இருக்கும் நிலையில் இருவரையும் உள்ளே வைத்து அரவிந்த் பூட்டி விடுகின்றார். மேலும் அட்டனன்ஸ் ரெக்கார்ட்டில் அன்பு மற்றும் ஆனந்தி இருவருக்கும் பதிலாக மித்ரா கையெழுத்து போட ஆஃபீஸ் ரெகார்ட் படி இருவரும் கம்பெனியை விட்டு வெளியில் போனதாக கணக்காகி வருகின்றது.

இரவு ரொம்ப நேரம் ஆகியும் ஆனந்தி ஹாஸ்டலுக்கு வராததால் அவரின் தோழிகள் அனைவரும் வார்டனிடம் சென்று கூறுகிறார்கள். ஆனந்தி இன்னும் ஹாஸ்டலுக்கு வரவில்லை அவருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை என தோழிகள் கூற வார்டன் உடனே மகேஷுக்கு போன் போடுகிறார்.

கம்பெனியில் இருந்து இருவரும் வெளியே போனது போல் காட்டப்பட்டதால் அன்பு மற்றும் ஆனந்தி வேறு எங்கேயாவது சென்று இருப்பார்கள் என்று சந்தேகம் எழ தொடங்குகின்றது. அதிலும் மகேஷ் ஏற்கனவே அன்பும் ஆனந்தியும் நெருங்கி பழகி வருவதால் மிகுந்த கோபத்தில் இருக்கின்றார். அதனால் இப்படி ஒரு சம்பவம் நடந்து விட்டால் கண்டிப்பாக அன்புவை கம்பெனியை விட்டு வெளியேற்றி விடுவார்கள் என்று சந்தோஷப்படுகிறார். எப்போதும் மித்ரா விரித்து வலையில் சிக்காமல் தப்பிக்கும் ஆனந்தி இந்த முறையும் தப்பிப்பாரா என்பதை வரும் எபிசோடுகளில் பார்ப்போம்.

Mahalakshmi

Recent Posts

BREAKING: தபால் வாக்கு நடைமுறையில் அதிரடி மாற்றம்… 3.4 லட்சம் அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்…!

தேர்தல் ஆணையம் (ECI) வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான தபால் வாக்கு செலுத்தும் நடைமுறையில் மிக முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளது. முன்னதாக, தேர்தல்…

50 seconds ago

“LIC பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்!… “ஒரு பங்கு வைத்திருந்தால் இன்னொரு பங்கு இலவசம்” எப்போது கிடைக்கும் தெரியுமா?… வெளியான அசத்தல் அறிவிப்பு…!!!

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்ஐசி (LIC), தனது பங்குதாரர்களுக்கு 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்க இயக்குநர்…

2 minutes ago

அரசியல் களத்தில் அதிரடி திருப்பம்..! பல ஆண்டு பகைக்கு முற்றுப்புள்ளியா..? சித்தப்பா காலில் விழுந்த சிராக் பஸ்வான்..!!

பீகார் அரசியலில் நீண்ட நாட்களாக நீடித்து வந்த குடும்பப் பூசலுக்கு மத்தியில், மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் தனது சித்தப்பா…

3 minutes ago

“திமுகவை திட்ட மாட்டேன்”…. மேடையிலேயே போட்டுடைத்த கமல்… பதறிய அரசியல் களம்…!

சேலத்தில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் பேசிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தமிழக அரசியலில் ஒரு புதிய திசையை…

5 minutes ago

“சரணடையச் சொன்னால் போர் தான்”… அமெரிக்காவை அதிர வைத்த ஈரான் அதிபரின் மாஸ் எச்சரிக்கை… கசிந்த ரகசியத் தகவல்…!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் அமெரிக்காவுக்கு விடுத்துள்ள நேரடி எச்சரிக்கை, ஏற்கனவே போர்ப் பதற்றத்தில் இருக்கும் மேற்காசியப் பிராந்தியத்தில் பெரும்…

12 minutes ago