சன் டிவியில் ஒளிபரப்பாக கூடிய சீரியல்களில் பெரும்பாலான சீரியல்கள் குறைந்தபட்சம் ஆயிரம் எபிசோட்களை நெருங்கிய பிறகு தான் முடிவுக்கு வரும். அதுவும் சில சீரியல்கள் எந்த அளவிற்கு இழுத்தடிக்க முடியுமோ அந்த அளவிற்கு இழுத்தடிக்கப்பட்டு மூன்று நான்கு வருடங்கள் கழித்து தான் முடிவுக்கு வரும். ஆனால் தற்போது ஒவ்வொரு சேனல்களும் போட்டி போட்டு வருவதால் சன் டிவியில் திடீரென்று எடுத்த முடிவு என்னவென்றால் எந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் அடிபடுகின்றதோ அதையெல்லாம் ஒவ்வொன்றாக முடித்துக் கொண்டு வருகிறார்கள். அதன்படி தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாக கூடிய முக்கியமான சீரியல்கள் ஒவ்வொன்றாக முடிக்கப்பட்டு வரும் நிலையில் இனியா சீரியல் விரைவில் முடிவுக்கு வரவுள்ளது.
சுமார் இரண்டு வருடங்களாக இந்த சீரியல் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிலையில் மக்கள் மத்தியில் போதிய ஆதரவு கிடைக்காததால் விரைவில் முடிக்க போகிறார்கள். சன் டிவியில் ஆலியா மானசா நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியல் கடந்த 2002 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த சீரியலில் கதாநாயகியாக ஆல்யா மானசா நடித்து வருகின்றார்.தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர் தற்போது விரைவில் முடிவுக்கு வரவுள்ளது.
கடந்த ஆண்டு வரை டி ஆர்பியில் சக்கை போடு போட்டு வந்த இனியா சீரியல் கடந்த சில மாதங்களாகவே டாப் 10 பட்டியலில் இடம் பிடிக்காததால் அதனை தற்போது முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இனியா சீரியலுக்கு பதிலாக அன்பே வா மெகா தொடர் பிரபலம் பூமிகா நடிப்பில் ஆடுகளம் என்ற புதிய சீரியல் ஒன்று உருவாகி வரும் நிலையில் அது விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. அது இல்லை என்றாலும் மக்கள் மத்தியில் அதிகம் விரும்பப்பட்ட எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாம் பாகம் இனியா சீரியலுக்கு பதிலாக ஒளிபரப்பு செய்யப்படலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…
கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…