திருவள்ளூரில் ஏசி வாங்கித் தராததால் கணவனுடன் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் அருகே உள்ள புல்லரம்பாக்கத்தைச் சேர்ந்த மோனிகா (24), வெயில் கொடுமை தாங்க முடியாமல் தனது கணவர் ஆகாஷிடம் ஏசி வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். ஆனால், ஏசி வாங்கித் தருவதில் தம்பதியிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனால் மனமுடைந்த மோனிகா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இந்தத் துயரச் சம்பவம் தொடர்பாகப் பெண்ணின் பெற்றோர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். தனது மகள் வரதட்சணைக் கொடுமையால் தற்கொலை செய்துகொண்டதாக அவர்கள் புகாரில் குறிப்பிட்டுள்ளனர். புகாரின் அடிப்படையில் புல்லரம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி இரண்டே ஆண்டுகளே ஆவதால், இந்தத் தற்கொலை குறித்து ஆர்.டி.ஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அமெரிக்கப் போர்க்கப்பல்களைத் தாக்க…
கர்நாடக மாநிலம் விஜயப்புராவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தெருநாயால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சுமார் 30 மீட்டர் தூரம்…
வெனிஸ் பைனாலே 2026 (Venice Biennale 2026) கலைக் கண்காட்சியில், கடல் மட்டம் உயர்ந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவாவில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தின் போது, கார் ஓட்டுநரின் துரிதமான செயல்பாட்டால் இருவர் உயிர்…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக இதுவரை சட்டப்பேரவையில்…
சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின்…