அந்த ஜாதிகாரனை எதுக்கு கல்யாணம் பண்ண.. நான் உன்னை பார்த்துக்கிறேன்.. விசாரணைக்கு வந்த பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த சப்-இன்ஸ்பெக்டர்…!

By Nanthini on ஆவணி 2, 2025

Spread the love

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வருமாறு பெண் ஒருவரை சப் இன்ஸ்பெக்டர் அழைத்த நிலையில் அவர் தன்னை உல்லாசத்திற்கு வருமாறு அழைத்ததாக கூறி அந்தப் பெண் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக அந்த பெண் வெளியிட்டுள்ள வீடியோவில், போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற என்னிடம் புகார் சம்பந்தமாக சப் இன்ஸ்பெக்டர் விசாரித்தார். பிறகு அவர் என்னிடம், நீ உன்னுடைய கணவரை காதல் திருமணம் செய்து மூன்று குழந்தைகள் பெற்றுள்ளாய். நீ உயர்ந்த ஜாதி தானே, தாழ்ந்த ஜாதியை சேர்ந்தவனை திருமணம் செய்து பிள்ளையை பெற்றிருக்க, உனக்கு எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன். நீ எனது ஆசைக்கிணங்க வேண்டும்.

இல்லையென்றால் உன் மனுவை விசாரிக்காமல் நான் காலதாமதமாக அலைக்கழிப்பேன் என்று என்னிடம் கூறினார். இதனைத் தொடர்ந்து நான் அங்கிருந்து அழுது கொண்டே வீட்டுக்கு வந்து நடந்ததை வெளிமாநிலத்தில் லாரி ஓட்டிக் கொண்டிருக்கும் கணவரிடம் செல்போன் மூலம் தெரிவித்தேன் என்று அந்த பெண் கூறியுள்ளார். சப் இன்ஸ்பெக்டர் மீது குற்றம் சாட்டை சுமார் இரண்டு நிமிடம் பேசி அந்த வீடியோவை பெண் வெளியிட்டுள்ள நிலையில் தற்போது அது வைரலாகி வருவது திருச்சியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.