அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள கால்வெஸ்டன் பிளஷர் பியர் பொழுதுபோக்கு பூங்காவில், மே 28 அன்று ஒரு அதிர்ச்சிகரமான விபத்து ஏற்பட்டது. பள்ளிச் சுற்றுலா வந்த 8 மாணவர்கள் சாகசப் பயணத்திற்காக அங்குள்ள ரோலர் கோஸ்டர் ரயிலில் ஏறியுள்ளனர். ஆனால், அந்த ரயில் செங்குத்தான பாதையில் மேலே ஏறிக்கொண்டிருந்தபோது, சுமார் 100 அடி உயரத்தில் திடீரென பழுதடைந்து நடுவழியிலேயே நின்றது. இதனால் அந்த மாணவர்கள் அனைவரும் தலைகீழாக, காற்றில் தொங்கியபடி ஆபத்தான நிலையில் தவித்தனர்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில், கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் மாணவர்கள் சுமார் 4 மணி நேரம் உயரத்தில் தொங்கியவாறே இருக்க வேண்டியிருந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், சிறப்பு மீட்புக் கருவிகள் மற்றும் உயரமான ஏணிகளைக் கொண்ட இன்ஜின்களைப் பயன்படுத்தி தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, 4 மணி நேரம் கழித்து 8 மாணவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டு கீழே கொண்டு வரப்பட்டனர். கடும் வெப்பத்திலும், பயத்திலும் இருந்த மாணவர்கள் மீட்கப்பட்ட போது மிகவும் அதிர்ச்சியடைந்திருந்ததாக மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.
இந்த பயங்கரமான சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. அதில் மாணவர்கள் காற்றில் தலைகீழாகத் தொங்குவதும், அவர்களை மீட்க தீயணைப்பு வீரர்கள் போராடுவதும் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவைக் கண்ட இணையவாசிகள் பலர், “இந்த விபத்துக்கு காரணமான பொழுதுபோக்கு பூங்கா நிர்வாகத்தின் மீதும், தரமற்ற உபகரணங்களை பயன்படுத்தியதற்காகவும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும், “அந்த மாணவர்கள் இனிமேல் தப்பித்தவறிக்கூட ரோலர் கோஸ்டரில் ஏற மாட்டார்கள்” என்றும் தங்களது அதிர்ச்சியையும் கருத்துகளையும் பகிர்ந்து வருகின்றனர்.
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் நடக்கும் மோசடிகளுக்கும், கவனக்குறைவால் தவறான நபர்களுக்குப் பணம் மாறுவதற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இன்று (ஜூன்…
உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டத்தில், விராஜ் (என்ற ஜித்தேந்திர பதக்) என்ற இளைஞன், ஒன்றரை வயதுக் குழந்தையான ஆரவ்வை…
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புதிய கட்சி ஒன்றைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் வெறும் வதந்தி என்று பாஜக…
மாற்றுத்திறனாளிகளுக்கான ₹2,000 உதவித்தொகைத் திட்டத்தில் புதிய சிக்கல் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் எந்தவித முறையான காரணமும் இன்றி…
உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் முக்கிய சூசகமான தகவலை வெளியிட்டுள்ளார். உள்ளாட்சித் தேர்தல்…
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அக்கட்சியிலிருந்து விலகி புதிய கட்சி ஒன்றைத் தொடங்குகிறார் என்ற தகவல் சமூக ஊடகங்களில் (SM)…