“இந்த வயசுல உங்களுக்கு காதல் கேக்குதா?”… 9 ஆம் வகுப்பு படிக்கும் 3 மாணவிகளை கண்டித்த ஆசிரியை… அடுத்த நொடியே நடந்த பரபரப்பு சம்பவம்…!

By Nanthini on புரட்டாதி 23, 2025

Spread the love

பொள்ளாச்சி அருகே ஆசிரியை கண்டித்ததால் ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் மூன்று பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி அருகே உள்ள கஞ்சம்பட்டி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் காலாண்டு தேர்வு நடைபெற்ற வருவதால் நேற்று வழக்கம்போல மாணவ மாணவிகள் பள்ளிக்குச் சென்றனர். அப்போது அங்கு வந்த ஒன்பதாவது படிக்கும் மூன்று மாணவிகளிடம் பள்ளி ஆசிரியை ஒருவர் காதல் வேலைகளில் மாணவிகள் ஈடுபட்டு இருப்பதாக கூறி கண்டித்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்து மாணவிகள் பேசியபோதும் ஆசிரியை தொடர்ந்து அவர்களை கடுமையாக திட்டி உள்ளார்.

இதனால் மணமுடைந்த மூன்று மாணவிகளும் பள்ளியின் வெளியே சாணி பவுடர் குறித்து தற்கொலைக்கு முயன்ற உள்ளனர். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனே மாணவிகளை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் அங்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடனே இது குறித்து தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த பெற்றோர்கள் அங்கிருந்து ஆசிரியர்களிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.