“அம்மா, நான் ஸ்கூலுக்கு போக மாட்டேன்”… அடம் பிடித்த மகள்… சமாதானம் செய்து அனுப்பி வைத்த தாய்… சற்று நேரத்தில் வந்த போன் கால்….!

By Nanthini on கார்த்திகை 8, 2025

Spread the love

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உள்ள புகழ்பெற்ற நீராஜா மோடி பள்ளியில் அமாயிரா என்ற ஒன்பது வயது மாணவி கடந்த நவம்பர் 1ஆம் தேதி பள்ளி கட்டிடத்தில் நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். தன்னுடைய மகள் புல்லிங் தொல்லை மற்றும் பாலியல் ரீதியான கேள்விகளுக்கு ஆளானதால் இந்த முடிவை எடுத்ததாகவும் கடந்த ஓராண்டாக பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்து அவர்கள் அலட்சியப்படுத்தியதாகவும் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது குறித்து அந்த சிறுமியின் தாய் கூறுகையில், பள்ளிக்கு போகமாட்டேன் என்று மகள் அழுத குரல் பதிவை ஆசிரியருக்கு அனுப்பியும் நடவடிக்கை இல்லை, ஒரு பெற்றோர் ஆசிரியர் சந்திப்பில் மற்ற மாணவர்கள் சிறுமியை கேலி செய்த போது ஆசிரியர் அதனை கண்டிக்காமல் அவர் பையன்களுடன் பேச கற்றுக் கொள்ள வேண்டும் என்று பதில் அளித்துள்ளார். தற்கொலைக்கு சற்று முன்பு அந்த சிறுமி ஆசிரியரிடம் பேசியதே சிசிடிவி காட்சியில் பதிவாகி இருந்தது. ஆனால் அதில் ஆடியோ பதிவு இல்லை. மேலும் ஐந்தாயிரம் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் பல மாடி கட்டிடங்களில் பாதுகாப்பு வலை அல்லது கிரில் இல்லாததை ஏன் என்றும் பெற்றோர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த துயரம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.