ஐயோ பாவம்… அடுத்த பிறவியில டாக்டராகுறேன் மா… நீட் தேர்வு அழுத்தத்தால் 19 வயது மாணவர்… உயிரை மாய்த்துக் கொண்ட கொடூரம்… நெஞ்சை நடுங்கவைக்கும் சம்பவம்…!

By Swetha on ஆவணி 21, 2026

Spread the love

மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் உள்ள வைஜாபூர் தாலுகாவில் உள்ள கண்டாலா கிராமத்தைச் சேர்ந்த 19 வயதான சுராஜ் சுபாஷ் ஷிண்டே என்ற மாணவர், நீட் தேர்வுக்கான கடுமையான மன அழுத்தத்தின் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டார். “மன்னித்துவிடுங்கள் அம்மா, அப்பா… அடுத்த பிறவியில் உங்களுக்காக நிச்சயமாக மருத்துவராவேன். தயவுசெய்து உங்களை நன்றாகப் பார்த்துக்கொண்டு மகிழ்ச்சியாக இருங்கள்” என்று உருக்கமான இரண்டு வரி கடிதத்தை எழுதி வைத்துவிட்டு அவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

முன்னதாக, கேள்வித்தாள் கசிவு புகார்களைத் தொடர்ந்து மே மாதம் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்தத் தேர்வு முறைகேடு நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன், இளைஞர்களின் தீவிர போராட்டத்திற்கு வழிவகுத்தது. எதிர்க்கட்சிகளின் போராட்டங்களைத் தொடர்ந்து கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

   

நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து மத்திய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே, தேர்வு முறைகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் தேசிய தேர்வு முகமையின் செயல்பாடுகளை மேம்படுத்தவும் ராதாகிருஷ்ணன் தலைமையிலான 7 பேர் கொண்ட குழு மற்றும் இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நிலேகனி தலைமையிலான உயர்மட்டக் குழுவை அரசு அமைத்துள்ளது. மேலும், NTA அமைப்பிற்குத் தேவையான உட்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகளை வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.