மே 3-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வின் வினாத்தாள் கசிந்தது ஆதாரங்களுடன் உறுதியானதை அடுத்து, அத்தேர்வை ரத்து செய்வதாக தேசிய தேர்வு முகமை (NTA) அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்திய சிபிஐ, மகாராஷ்டிராவைச் சேர்ந்த மருத்துவ மாணவர் சுபம் கெர்னர் என்பவரைக் கைது செய்துள்ளது. டெலிகிராம் செயலி வாயிலாக சுமார் ₹10 லட்சத்திற்கு வினாத்தாள் கைமாறியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதிய இந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது கல்வி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தொடர்புடைய மற்ற நபர்களைப் பிடிப்பதற்கான தேடுதல் வேட்டையை சிபிஐ தீவிரப்படுத்தியுள்ளது. தேர்வு முறைகேடு கண்டறியப்பட்டதையடுத்து, மாணவர்களின் நலன் கருதி முறையான மற்றும் நேர்மையான முறையில் தேர்வை மீண்டும் நடத்த NTA முடிவு செய்துள்ளது. விரைவில் இதற்கான மறுதேர்வு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று NTA இயக்குநர் தெரிவித்துள்ளார். முறைகேடுகளைத் தவிர்க்க அடுத்தமுறை கூடுதல் பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்படும் எனவும் கல்வி அமைச்சகம் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
திமுக மற்றும் உதயநிதியின் தனிப்பட்ட வியூக வகுப்பாளராகச் செயல்பட்டு வந்த சுனில் தனது பொறுப்பில் இருந்து திடீரென விலகியிருப்பது திமுக…
அயதுல்லா மொஜ்தபா கமேனி மார்ச் மாதம் ஈரானின் உச்ச தலைவராக நியமிக்கப்பட்டார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தனது நாட்டின்…
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'நீயா நானா' நிகழ்ச்சியில் வாரந்தோறும் சமூகத்தில் நடக்கும் முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படுவது வழக்கம்.…
கோவை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய செங்கோட்டையன், பா.ஜ.கவிலிருந்து அண்ணாமலை விலகியது அவருக்கு ஏற்பட்ட வேதனையின் காரணமாக இருக்கலாம் என்றும், அவர்…
ஸ்ரீவைகுண்டம் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் சரவணனின் பெயரைப் பயன்படுத்தி, அவரது லாட்டரி நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி…
நடிகை த்ரிஷா சுமார் 22 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் தனது அழகாலும் நடிப்புத் திறமையாலும் முன்னணி நடிகையாக வலம்…